Skip to main content

கஜாவின் கோரத்தாண்டவம்;8 பேர் உயிரிழப்பு!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

நேற்று இரவு கரையை கடக்க தொடங்கிய கஜா புயல் நாகை மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

ASA

 

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். பட்டுக்கோட்டை சிவன் கொல்லையில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ரமேஷ், தினேஷ், சதீஷ் மற்றும் உறவினர் அய்யாதுரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து  3 வயது பெண் குழந்தை திராவிடமணி உயிரிழந்துள்ளது. 

 

கடலூரில் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவரும், கடலூர் குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவரும் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் செய்யாறு அருகே வடமணபாகத்தில் கனமழையால் சுவர் இடிந்ததில்  7 வயது சிறுமி  பிரியாமணி பலியானார் மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்