Skip to main content

20 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்! இலங்கை கடத்தல் புள்ளிகள் கைது! 

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

400 kg bags of cannabis worth 20 crores seized! Sri Lankans  arrested!

 

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அத்யாவசியப் பொருட்கள் மற்றும் போதைச் சரக்குகள் ரெகுலராகவே கடத்தப்படுகின்றது. இதற்காக தூத்துக்குடி இலங்கை கடல் மார்க்கத்தை கடத்தல் கடல் வழியாகவே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

 

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு இலங்கை கல்பிட்டியா துறைமுகம் அருகேயுள்ள குதிரைமலை முனைப்பகுதியில் தமிழக மீன் பிடி படகு ஒன்றை வழி மறித்துச் சோதனை செய்திருக்கின்றனர் இலங்கை கடற்படையினர். அதுசமயம் படகில் இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவர, படகிலிருந்த 10 மூட்டைகளின் 400 கிலோ கஞ்சாவையும் படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மற்றும் கஞ்சாவை வாங்கிச் செல்ல காத்திருந்த இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த 5 பேர் என 10 பேரைக் கைது செய்தனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு தங்கச்சிமடத்தில் பதிவு செய்யப்பட்டது. கஞ்சா கடத்தலில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்சன், கிறிஸ்டி ராஜ், தங்கச்சிமடம் அந்தோணி, கீழக்கரை இம்ரான்கான், திருப்புலானி உதயகுமார் என தெரியவந்தது. இவர்கள் மதுரையிலிருந்து கஞ்சா மூட்டைகளைக் கடத்திக் கொண்டு வந்து தூத்துக்குடியின் கீழவைப்பார் பகுதியிலிருந்து படகில் கடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி 35 லட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 20 கோடி என்றும் சொல்லப்படுகிறது. 

 

இது குறித்து தமிழக க்யூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய அரசின் உளவுத்துறையான ஐ.பி. ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்பகுதியிலிருந்து உட்சபட்சமாக 400 கிலோ கஞ்சா இலங்கை முனை வரை கடத்திச் சென்று பிடிபட்டது பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.