Skip to main content

நீட் தேர்வில் வெற்றிபெற பயிற்சி மையத்திற்கு 20 லட்சம்... மும்பை விரைந்த சிபிசிஐடி!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்ததாக உதித்சூர்யா என்ற மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த உதித்சூர்யாவை இரண்டு முறை நீட் தேர்வு எழுத வைத்தும் தோல்வியே கிடைத்ததால் மருத்துவர் கனவு பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

 

 20 lakhs for training center to succeed in NEET exam ...

 

இந்நிலையில் இந்த ஆள்மாறட்டத்தை செயல்படுத்தியது எவ்வாறு, யாரெல்லாம் இதற்கு துணைபுரிந்தது என்பது குறித்த விசாரணையில் மும்பையிலுள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக வெங்கடேசன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தற்போது மும்பை விரைந்துள்ள சிபிசிஐடி போலீசார் அந்த நீட் பயிற்சி மையத்தையும், உதிர்த்சூர்யாவிற்கு பதிலாக நீட் தேர்வு எழுதிய நபரையும் விசாரணை செய்து கைது  முடிவெடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்