Skip to main content

கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி... இளைஞர் மீது வழக்கு!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

10th class student admitted to hospital as a pregnant ... Case against youth!

 

பள்ளி மாணவி ஒருவர்  கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பள்ளியில் படிக்கும்போதே அச்சிறுமியை இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார் ராஜபாண்டி. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆத்திரத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஏனென்றால், அச்சிறுமிக்கு ஒரு அக்காவும், தங்கையும் இருக்கின்றனர்.  அவர்களது எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலைப்பட்டனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரும் ராஜபாண்டியின் பெற்றோரும் கலந்து பேசி, கடந்த 30-8-2021 அன்று ராஜபாண்டியின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராஜபாண்டியும் அச்சிறுமியும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வந்தனர்.

 

அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்துவந்த அச்சிறுமியை, 9 மாத கர்ப்பிணியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைக்க, பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற்று, சிறுமியின் அம்மா, அப்பா, கணவர்(?) ராஜபாண்டி, அவருடைய அம்மா, அப்பா பொன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுவும் குழந்தைத் திருமணம்தான். ஆனால், புகாரளித்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி. இவருடன் பணியாற்றும் உறுப்பினர் பாண்டீஸ்வரிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மூலம்,  சிறுமி ஒருவருக்கு நடந்த குழந்தைத் திருமணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  

 

அந்தச் சிறுமி உள்ளூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-வது வகுப்பு படிக்கிறார். தனது உறவினர் குருசாமியின் மகன் சுரேஷ்குமாரிடம் காதல் வயப்பட்டிருக்கிறார்.  4 மாதங்களுக்குமுன் சுரேஷ்குமார், காதலியான அச்சிறுமியிடம்  ‘நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்..’ எனக் கூறி, நெருங்கிப் பழகியிருக்கிறார். அதனால், அச்சிறுமி மூன்று மாத கர்ப்பமடைய, கடந்த ஜூன் 3-ஆம் தேதி, திருவண்ணாமலை – நரிப்பாறையில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். 

 

விசாரணையின் முடிவில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கிய சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரியும் அவருடன் பணியாற்றுபவர்களும் சேர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகாரளிக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.