Skip to main content

''அண்ணாமலை இதற்கு போராடுவாரா?''-பாமக அன்புமணி ராமதாஸ் கேள்வி

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

' Will Annamalai fight for this? '' - Pmk Anbumani Ramadas question

 

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பாமகதான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிர்வாகம் சீராக இருக்கும். யார் பக்கமும் ஈகோ இருக்கக்கூடாது. பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஒரு சிறிய கட்சி . நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியில் 80 சதவிகிதம் கன்னியாகுமரியில் கிடைத்துள்ளது. ஏனென்றால் கன்னியாகுமரியில் தேசிய அரசியல்தான் எப்பொழுதும். அங்கு பாஜக-காங்கிரஸ் இடையேதான் எப்பொழுதும் போட்டி. திமுக, அதிமுக மற்ற கட்சிகள் அங்கு போட்டியில் இருக்காது. அடுத்து தென்காசியில் 10 சதவிகித இடங்களைப் பெற்றுள்ளது. அதுவும் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மாவட்டம். மீதம் உள்ள 10 சதவீதம்தான் தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ளார்கள். இது நகர்ப்புற தேர்தலில் அவர்கள் பெற்ற இடம். ஊரக தேர்தலில் இந்த இடம்கூட அவர்களுக்கு கிடையாது. ஆனால் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான். அண்ணாமலை மேகதாது விவகாரம் பற்றி கர்நாடகாவில் போராடுவாரா? நாங்கள் போராடி இருக்கிறோம். 1000 வாகனங்களை எடுத்துக்கொண்டு எல்லைவரை சென்று ராமதாஸ் போராடியுள்ளார். மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சாபக்கேடு. அதை கட்ட விடமாட்டோம். நங்கள் போராடுவோம். எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி, மத்தியிலும் பாஜக ஆட்சிதானே நடக்கிறது அவர்கள் இப்படிப் போராடுவார்களா?'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.