Skip to main content

“எடப்பாடிக்கு வெல்கம்; ஓபிஎஸ்-க்கு நோ தான்”- ஜெயக்குமார் விளக்கம் 

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Welcome to Edappadi; No to OPS “Letter alone does not have impact” - Jayakumar explains

 

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

 

பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

 

அந்த வகையில் அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக ஜி20 மாநாட்டிற்காக பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டு இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் ஆதரவாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி அனுப்பியுள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக ஜனவரி 16ல் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. புலம் பெயர்ந்த மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய செயல்முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர இருக்கிறது.

 

ஜி20 மாநாட்டில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுத்து மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இந்திய சட்ட ஆணையமே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்பதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் அனுப்பியது. மத்திய அரசின் அங்கீகாரம் என்பதன் அடிப்படையில் பார்க்கலாம். 

 

தற்போது அனுப்பப்பட்ட கடிதத்தை பொறுத்தவரையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அந்த கூட்டத்தை நடத்தினாலும் கூட மாநிலத் தேர்தல் ஆணையம் தான் இந்த கடிதத்தை அனுப்பியது. ஓபிஎஸ் அணி அனுப்பியுள்ள கடிதத்தால் எந்த தாக்கமும் அவர்களுக்கு ஏற்படப்போவது இல்லை.

 

எங்களைப் பொறுத்தவரையில் இந்த கட்சி கொடி சின்னம் ஒற்றுமை என எல்லாம் எடப்பாடியின் தலைமையில் சிறப்பாக இயங்குகிறது. மேற்கொண்டு ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கட்சி முடிவு செய்யும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

Next Story

“அதிமுக கட்சி பிளவுக்கு காரணம்; தினகரனிடம் கெஞ்சிய எடப்பாடி” - கவிஞர் கண்ணன்ஜி

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Kavingar Kannanji  interview

 

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கவிஞர் கண்ணன்ஜி பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் கூறியதாவது: “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் தோற்பதற்கு அமமுக காரணமாக இருந்துள்ளது. அதிமுகவில் எந்தப் பிளவும் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். எடப்பாடி பழனிசாமி தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். குழப்பங்கள் அனைத்தையும் நீக்கி கழகத்தை வலுவாக்க ஓபிஎஸ் எடுத்துள்ள முயற்சிதான் இந்த சந்திப்பு. இது சாதிக்கான சந்திப்பு அல்ல. சாதிப்பதற்கான சந்திப்பு. 

 

ஜெயக்குமார் ஒரு அரசியல் பபூன். காமெடி பீஸ். அவர் இந்த சந்திப்பை விமர்சிக்கிறார். மோசமான நபரான ஜெயக்குமார் விமர்சிப்பது தெருவில் குரைப்பது போன்றது தான். கட்சியின் நலனுக்காக நாங்கள் பழசை மறந்துவிட்டு ஒன்றாக இணைந்துள்ளோம். பதவியிழந்த ஜெயக்குமாருக்கு பதவியை வழங்கியவர் சின்னம்மா. எடப்பாடியை முதலமைச்சராக்கியவர் சின்னம்மா. "இப்போது நான் தான் முதலமைச்சர் என்று அறிவித்தால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கையெழுத்து வாங்கிய பிறகு அறிவியுங்கள்" என்று டிடிவி தினகரனிடம் கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி. 

 

இவர்கள் நடத்துவது கட்சி அல்ல, கம்பெனி. இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை வரப்போகிறது. துரோகம் செய்பவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். கட்சி நிச்சயம் மீட்கப்படும். சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான். எடப்பாடி பழனிசாமியின் மகன் ஹோட்டலில் யார் யாரை சந்தித்தார் என்பது தெரியும். கே.பி.முனுசாமி அமைச்சர் துரைமுருகனோடு தொடர்பு வைத்துள்ளார். கோடநாடு வழக்கு பற்றி பேசினாலே நடுங்குகிறார் பழனிசாமி. நேரடியாக ஒருவரை சந்திப்பது என்பது மனிதப் பண்பு. 

 

ஆர்.பி.உதயகுமார் போல் ஒரு பச்சோந்தியை எங்குமே பார்க்க முடியாது. சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று மொட்டையடித்தவர் உதயகுமார். இந்தக் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே உதயகுமார் தான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிப்பது உதயகுமாரின் வழக்கம். அவருக்கான பாடம் விரைவில் கிடைக்கும். அதிமுகவை மீட்டெடுப்பதற்கு ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மிக முக்கியம். எட்டப்பனுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு செயல்படும் பழனிசாமி போன்றவர்கள் அதிமுக எனும் பாலில் விழுந்த விஷம். அந்த விஷத்தை நீக்கி அதிமுகவை வெற்றிபெற வைப்பது தான் நோக்கம். அதற்கான பணியை ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார்.”