Skip to main content

ஓபிஎஸ், இபிஎஸ் பிடிவாதம்! -அமித்ஷா டென்ஷன்!

Published on 01/03/2021 | Edited on 02/03/2021

 

 

Yes ... No ...! - Ops, Eps Comment about sasikala's admk entry

 

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், பாஜக மாநிலத் தலைமையின் செல்வாக்கு எடுபடாததால், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பாஜகவினர் சிலர் கூறுகின்றனர்.

 

பேச்சுவார்த்தையின் போது, 22 அல்லது 23 தொகுதிக்கு மேல் நீங்கள் கேட்காதீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவிற்கு இந்தத் தொகுதிகளே போதுமானது. குறைந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை அதிகமாகப் பெறுங்கள் என அதிமுக தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இறங்கிவராத அமித்ஷா, 30 தொகுதிகள் வேண்டும் எனக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு நடுவில், அதிமுகவுடன் சசிகலாவையும் (சசி+தினகரன்) இணைத்துக் கொள்ளுங்கள் என அமித்ஷா அட்வைஸ் செய்ய, எடப்பாடியின் முகம் இறுகிப் போயுள்ளது. மேலும் தொடர்ந்த அமித்ஷா, அதிமுகவின் வாக்குகளை சசிகலா சிதறடித்துவிடக் கூடாது. அதனால்தான், இந்த இணைப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது எனக் கண்டிப்பான குரலில் சொல்லியுள்ளார்.

 

அமித்ஷாவுக்கு, அதிமுக ஒன்றிணைய வேண்டும் அல்லது திமுக தோற்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். எப்படியாவது சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் அவரின் பிரதான இலக்கு என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத பாஜகவினர். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இணைப்பிற்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ்ஸோ சசிகலா இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இப்படி, சசிகலாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என ஒருவரும், வேண்டாம் என இன்னொருவரும் சொல்லிவருவதால் அமித்ஷா யோசனையில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம், அதிமுகவின் மற்றொரு தரப்பினர், சசிகலாவை பாஜக சீண்டவே இல்லை. அதுதான் சசிகலாவின் மவுனத்திற்குக் காரணம் எனச் சொல்கின்றனர்.

 

எது எப்படியோ, தேர்தல் தேதி நெருங்க இருப்பதால், விரைவில் இதற்கான முடிவுகளும் மர்ம முடிச்சுகளும் அவிழும் என எதிர்பார்க்கலாம்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.