Skip to main content

எது உண்மை?  நிதி  அமைச்சர் தான் விளக்க வேண்டும்... பாராளுமன்றத்தில் திருநாவுக்கரசர் பேச்சு

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

 

பாராளுமன்றத்தில் துணை நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் புதன்கிழமை (4.12.19) மாலை சுமார் 5.30 மணியளவில் பேசினார்.
 

அப்போது அவர், '2019- 2020 பொது பட்ஜெட்டின் போது சுமார் 27.80 லட்சம் கோடி ஆண்டு செலவிற்கு அனுமதி பெறப்பட்டது. தற்போது 21,246 ஆயிரம் கோடி கூடுதல் செலவீனத்திற்கு நிதி ஒதுக்க விவாதம் நடைபெறுகிறது. இதன் மூலம் 3.3 சதவிகிதமாக எதிர்பார்க்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை தற்போது 3.7 சதவிகிதமாக உயரப்போகிறது. நாட்டின் மொத்த உற்பத்தி ஜி.டி.பி. 4.5 சதவிகிதமாக இருந்தது 4 சதவிகிதமாக குறைந்து விட்டது. 7.7 சதவிகிதமாக இருந்து, கடந்த 4 ஆண்டுகளாக குறைந்து தற்போது 4 சதவிகிதமாக ஆகியுள்ளது. பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி எம்.பி ஜி.டி.பி 1.5 சதவிகிதம் தான். இது அதிகரித்து தவறாக சொல்லப்படுவதாக கூறுகிறார். எது உண்மை? நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்.

 

su.thirunavukkarasar


 

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.  50 சதவிகிதம் பேர் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு இந்தியாவில் வேலையில்லை.  உற்பத்தியில் முதலீடு குறைந்து வருகிறது.  குறிப்பாக தொழில் துறையில் முதலீடு குறைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் கோடியாக 2023-ல் உயரும் என்ற இந்த அரசின் அறிவிப்பு இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் நிறைவேற.  2033-34 - லாவது நடக்குமா என்பதே சந்தேகம்.
 

பிரதமர் அடிக்கடி வெளி நாடுகள் போய் வருகிறார்.  100 தடவைக்கு மேல் 100 நாடுகளுக்கு மேல் போயிருப்பார்.  வெளிநாடு வாழ் இந்திய (என்.ஆர்.ஐ). பிரதமர் போல் வெளிநாட்டில் வலம் வருகிறார்.  பார்க்காத நாடுகள் குறைவு, பார்க்காத மாநிலம், மாவட்டங்கள் இந்தியாவில் நிறைய உள்ளது.  வெளிநாடுகளில் இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடு F.D.I எவ்வளவு ஒப்பந்தம் இது வரை ஏற்பட்டுள்ளது   எந்தந்த  மாநிலங்களில் எவ்வளவு தொழிற் முதலீடு நடந்துள்ளது.  எவ்வளவு தொழில்கள் மாநில வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை  கிடைத்துள்ளது, தமிழ்நாட்டில் எந்த வெளிநாட்டு முதலீடும் பெரிய அளவில் நிகழவில்லை.


 

பண பற்றாக்குறையை (Deficit Budget) நிவர்த்தி செய்ய, பொருளாதார சரிவை சரிகட்ட எல்லா அரசு பொதுத் துறை நிறுவனங்களையும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.  அரசு நிறுவனங்களில் அரசு முதலீட்டின் பெரும் பங்கை 51 சதவிகிதத்திற்கு மேல் அதிகம் தனியாருக்கு விற்பதால் அரசு சிறிய பங்குதாரராக மாற்றப்படுகிறது.  இது இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் நடக்கிறது.

 

நிதி  அமைச்சர் திருச்சி பள்ளி, கல்லூரிகளில் படித்தவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு விற்க அரசு நடவடிக்கை எடுப்பதை நிதி அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினச் சம்பளத்தை ரூபாய் 300-க்கு மேல் உயர்த்தி கிராமப்புற பெண்களுக்கு உதவ வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாத பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். மீனவர்களுக்கு மீன் பிடிக்காத காலத்தில் தரப்படும் உதவித் தொகை இறு மடங்காக உயர்த்தப்பட வேண்டும். 30 கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலையில்லை.  தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலையில்லை.  வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்க வேண்டும்.
 

பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.  பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ரூபாய் 2 கோடி வீதம் அதிகரிக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி 3 கோடியாகாவும், கேரளாவில் 6 கோடியாகவும், டெல்லியில் 10 கோடியாகவும் உள்ளது.  எனவே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.