Skip to main content

உடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
vote




சிவகங்கைப் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு இயந்திரத்தின் பின்பகுதி உடைக்கப்பட்டதால் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

 

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம்  வாக்குகள் 15,50,390 இதில் பதிவான வாக்குகள்10,75,114. சதவீதம் 69.34%.

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதுபோல் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்குகள் 263454. பதிவான வாக்குகள்197073 வாக்கு சதவீதம்74.80%. 

இது இப்படியிருக்க சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதல் வாக்கு  இயந்திரத்தின் பின்புறம் உடைக்கப்பட்டிருந்ததால் பதட்டம் உருவானது. இதனால் அந்த இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் பதட்டம் நிலவி வருகின்றது.


 

சார்ந்த செய்திகள்