Skip to main content

"வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உருவாகும்"  - ஆளுநர் உரையில் தமிழிசை நம்பிக்கை! 

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

"Puducherry will be a union territory free from poverty and unemployment" Governor's speech

 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் 15வது சட்டப்பேரவையின் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று (26.08.2021) காலை தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் இருந்து சரியாக 9.25 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவைக்கு வருகை தந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

 

பின்னர் சட்டப்பேரவையில் தமிழிசை செளந்தரராஜன் முதல்முறையாக ஆளுநர் உரையைத் தமிழில் நிகழ்த்தினார். அவர் உரையாற்றியது; “‘மருத்துவர், நோயாளியின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் இவற்றை அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும்' என்ற திருக்குறளுக்கு ஏற்ப covid-19 பரவியபோது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. பொது மக்களை நாடிச் சென்று மருந்துகள் வழங்குதல், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

 

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 50,838 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கல் திட்டத்தின் கீழ் 1,02,439 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 16,192 மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 17,643 மாணவர்களும் பலனடைந்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு ஒருமுறை ஊக்கத் தொகையாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அரசு நடத்திய தேசிய திறனாய்வு இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 10,000 வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் நிதியுதவி பெற்று உயர் கல்வியைத் தொடரும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவியாக ரூபாய் 18 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 438 மருத்துவக் கல்லூரி மாணவர்களும், 1,384 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 567 செவிலியர் பள்ளி மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.

 

இந்த அரசு, கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறது. விரைவில் கரோனா பாதிப்பில் இருந்து விடுபடும் என்று நான் நம்புகிறேன். இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடும் என்றும், எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத சிறந்த யூனியன் பிரதேசமாக புதுச்சேரி ஆட்சிப் பரப்பினை உருவாக்கும் என்றும் நான் நம்புகிறேன்.” இவ்வாறு ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.