Skip to main content

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி (படங்கள்)

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

 

சளி, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடலுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காஞ்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் அன்பழகனின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்