Skip to main content

டெல்லியில் 3 தலைவர்களுடன் சந்திப்பு; காரணத்தை விளக்கும் அண்ணாமலை

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Meeting with 3 leaders in Delhi; Annamalai explains the reason

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இச்சந்திப்பு அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “டெல்லி பயணம் அடிக்கடி செல்வது தான். அது புதிது ஒன்றும் அல்ல. ஜே.பி.நட்டா, அமித்ஷா. பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேற்று பார்த்தோம். கடந்த 1 மாதத்திற்குள் அமித்ஷாவை 2 முதல் 3 முறை கர்நாடகத் தேர்தலுக்காகவும், வேறு வேறு விஷயங்களுக்காகவும் தொடர்ச்சியாகச் சந்தித்துள்ளேன். 

 

பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாடு பாஜகவை எப்படி வலிமைப்படுத்துவது, எப்படி மக்களின் அன்பைப் பெறுவது, தமிழ்நாட்டில் பாஜக எப்படி பெரிய கட்சியாக; ஆளுங்கட்சியாக கொண்டு வருவது என்பதே நோக்கம். தமிழக அரசியல் களம் சூடாக உள்ளது. வித்தியாசமாக உள்ளது. அது குறித்த மீட்டிங் தான் டெல்லியில் நடைபெற்றது. இதில் புதிதாக எதுவும் இல்லை. 

 

பாஜகவிற்கோ எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த கட்சியின் மீதோ அல்லது தலைவர் மீதோ கோபம் இல்லை. கூட்டணியில் இருக்கும் போதும் கட்சி வளர வேண்டும் என நினைப்பது தவறல்ல. கூட்டணியில் இருக்கும் போது சிராய்ப்புகள், உரசல்கள் சகஜம். நேரம், காலம் வரும் போது யாருக்கு ஆதரவு தரவேண்டும் என்பது குறித்து மக்கள் முடிவு செய்கிறார்கள். கட்சிகளுக்கு இடையே சில கொள்கைகள் ஒத்துப்போவதால் கூட்டணி வைத்துள்ளோம். அதேநேரம் எல்லோரும் ஒரே விதமான கொள்கைகள் கொண்டவர்கள் அல்ல. கூட்டணி கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, நீட், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் நோக்கங்கள் வேறு. அதனால் இதில் கூச்சலோ ஆதங்கமோ எதுவும் இல்லை” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.