Skip to main content

சிறுமி வைத்த வேண்டுகோள்! -மறுத்துப் பேசாமல் அனுமதித்த ராகுல்!

Published on 26/01/2021 | Edited on 26/01/2021

 

மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கரூர் நகர பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் திறன் என்று அவருடைய பேச்சைக் கேட்டு முடித்த பிறகு அங்கிருந்து வாங்கள் மாரி கவுண்டம்பாளையத்தில் புறப்படும் வழியில் அப்பகுதியை சேர்ந்த சிறுமி, ''ராகுல் அங்கிள் நான் உங்களோட ஒரு செல்பி எடுக்கணும்'' என்று வைத்த வேண்டுகோளை எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக ஏற்றார். அப்போது எழுந்து நின்று அந்த சிறுமியின் கையை கொடுத்து வாகனத்தின் மீது ஏற்றி அவரோடு சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் சிறுமியிடம் பேசும்போது, யு ஆர் டைனமிக் சைல்டு என்று கூறி கன்னத்தில் தட்டி கொடுத்து தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்.

சார்ந்த செய்திகள்