Skip to main content

தனிமைப்படுத்திக் கொள்ளாமல் களப்பணியாற்றிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு கரோனா தொற்று!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

கடந்த ஜூன் 28-ஆம் தேதி ராஜபாளையம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் மகன்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். 

 

அப்போது, தங்கப்பாண்டியனின் ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ‘நெகடிவ்’ ரிசல்ட்டே வந்தது. அதனால், ராஜபாளையம் தொகுதியில், கரோனா நிவாரணப் பணிகளை, அவர் தொடர்ந்தபடியே இருந்தார். தி.மு.க. கட்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி, மீண்டும் தனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினார். தற்போது, ‘பாசிடிவ்’ ரிசல்ட் வந்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

நேற்றுகூட, ராஜபாளையம் மேற்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக,  மின் கட்டணைக் கொள்ளையடிக்கும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, கறுப்பு கொடியேந்தி முழக்கம் எழுப்பிய போராட்டத்தை, தலைமைத் தாங்கி நடத்தினார், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. 

 

தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையிலும், கடந்த 16-ஆம் தேதியிலிருந்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்