Skip to main content

''நீட்டை நிறுத்த முடியாது என திமுகவிற்கு தெரியும்'' - பிரதமரை சந்தித்த பிறகு பாஜக எல். முருகன் பேட்டி!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

'' DMK knows it can't stop Neet '' - BJP L Murugan interview after meeting PM!

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு பாஜக நான்கு இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்றியது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (03.07.2021) இந்திய பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உடனிருந்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

''தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, மகாபலிபுரம், தஞ்சாவூர் இவையெல்லாம் மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலாத் தலங்கள். இவற்றில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தென் தமிழகத்தில் தற்போது அங்கும் சில தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசியலில் நடக்கின்ற இந்த தேச பிரிவினைவாதம் அல்லது தேசத்திற்கு எதிரான சக்திகள் செயல்பாடு இருப்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றோம். மொத்தமாக இன்று எங்களது நான்கு எம்.எல்.ஏக்களும் அவரிடத்தில் பல விஷயங்களை தமிழகத்தின் வளர்ச்சிக்காக எடுத்து வைத்துள்ளோம். அதேபோல் நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளோம். தமிழக பாஜக எம்.எல்.ஏக்களுக்கு அவர் மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்தார்.

 

2017இல் இருந்து நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மாணவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் நீட்டை ரத்து செய்ய முடியாது என திமுகவிற்குத் தெரிந்தும், தேர்தல் அறிக்கையில் அதைக் கொண்டு வந்தார்கள். இன்று நீட்டை நிறுத்த முடியாது என அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் ஒரு போலி ஆணையத்தைப் போட்டுள்ளார்கள். நீட் வந்த பிறகு கிராமப்புற மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் கிட்டத்தட்ட 400 பேர் போயிருக்கிறார்கள். சாதகங்களை அந்தக் குழு கேட்கவில்லை அந்தக் குழுவின் சாராம்சத்தைப் பாருங்கள் நீட்டினால் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே கேட்கிறார்கள். நீட்டை ரத்து செய்ய முடியாது என்பதால்தான் சாக்குப்போக்கு சொல்வதற்காகவே இந்தக் குழுவைப் போட்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.