Skip to main content

ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடும்... கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக... ஆக்ஷன் எடுத்த எடப்பாடி!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க ஸ்டாலினும், தி.மு.க.வினரும் பெரும்  முயற்சி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  அதாவது, சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, கரோனாவின் கொடிய காலடித் தடம், சட்டமன்றத்திலும் பதிந்து விடக்கூடாது என்கிற கவனத்தோட, கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க. கோரிக்கை வைத்தபடியே இருந்தனர். ஆனால் எடப்பாடி அரசோ அதைக் கண்டுக்காமல் விடாப்பிடியாக நடத்திக் கொண்டே இருந்ததுள்ளது என்கின்றனர். தி.மு.க.வின் கடும் எதிர்ப்பால் ஏப்ரல் 9-ந் தேதிவரை நடக்க இருந்த கூட்டத்தைக் காலையிலும் மாலையிலுமாக 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டார். 
 

dmk



இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தையும் கரோனா காரணமாக ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. இதற்கு  மோடி அரசும் எந்த பதிலும் கொடுக்காததால், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதே பாணியில் தி.மு.க.வும் சட்டமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக 23 ந் தேதி அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது. 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வராமல் இருந்தால், ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடுமேன்னு நினைத்த  எடப்பாடி, சட்டசபைக் கூட்டத் தொடரை 24-ந் தேதியோடு முடிவுக்கு கொண்டு வருவதாக சபாநாயகர் மூலம் அறிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.