Skip to main content

தே.மு.தி.க  தலைமை ரொம்பவே  அப்செட்!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்து மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது.இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு கூட்டணி வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்த் வீட்டிலும் அன்று முழுக்க இறுக்கம் நிலவியிருக்கு. அங்க தன் தம்பி சுதீஷுடன் நியூஸ் பார்த்துக்கிட்டிருந்த பிரேமலதா, நாம நின்ன 4 தொகுதியிலும் ஒரு ரவுண்டில் கூட நாம முன்னிலைன்னு செய்தி வரலையேன்னு வருத்தப்பட்டிருக்கார். 

 

dmdk




இதற்கப்புறமும் பா.ம.க, தே.மு.தி.க தரப்பில் ராஜ்யசபா எம்.பி.,மத்திய மந்திரி பதவின்னு கனவு நீடிக்குதாம்.ஆனால் அதிமுக தலைமை கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் ராஜ்யசபா சீட்டை தேமுதிக, பாமகவிற்கு கொடுப்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்