Skip to main content

''இதுவே தமிழகத்தில் கரோனா சமூகத் தொற்றாகப் பரவியுள்ளதற்குக் காரணம்...'' -ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

R. S. Bharathi

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 22ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அப்போது அவர், மரணத்திலும் கூட அ.தி.மு.க. அரசு ஊழல் செய்திருக்கிறது. 444 பேர் மரணத்தை மறைத்ததற்கு முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். 

 

கரோனா பாதிப்புகளையும், மரணங்களையும் மறைத்ததே தமிழகத்தில் கரோனா பரவுவதற்கு காரணம். இதற்காக அ.தி.மு.க. அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு மாவட்ட வாரியாக உயிரிழப்பு அறிக்கை பட்டியலை வெளியிட வேண்டும்.

 

கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் வழிமுறைகளை வகுத்துள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த 444 பேர் உடல்கள் எவ்வாறு அப்புறப்படுத்தி அடக்கம் செய்யப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும். 

 

அ.தி.மு.க. அரசால் மறைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இந்த 444 பேர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின்போது ஒரு மறைவுக்கு அவரது உற்றார், உறவினர்கள் எனும் வகையில் குறைந்தபட்சம் 20 பேர் வந்திருந்தால்கூட 444 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஏறத்தாழ 8,880 பேராவது பங்கேற்றிருப்பார்கள். 

 

கரோனா மரணத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்த விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இந்த மரணங்களில் கடைப்பிடிக்கப்படாததால் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 8,800க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் கரோனாவைப் பரப்பியிருக்கிறார்கள். இதுவே தமிழகத்தில் இன்றைக்கு கரோனா ஒரு சமூகத் தொற்றாகப் பரவியுள்ளதற்குக் காரணம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவ்வாறு கூறினார்.

 

இந்தப் பேட்டியின்போது சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.