Skip to main content

“நீட் தேர்வு விலக்குதான் எனது லட்சியம்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

cm stalin campaign erode east byelection

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கான முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில், ஈரோடு சம்பத் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “பெரியார் பிறந்த மண் ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும், அவருக்கு குருகுலமாக இருந்தது ஈரோடுதான். இந்த இடைத்தேர்தல் எந்த சூழலில் வந்திருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எப்போதுமே தந்தை இறந்து, அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு மகன் வருவார். ஆனால், நம் சூழ்நிலை எவருக்கும் வரக்கூடாது. மகன் இறந்து அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ் உங்களிடத்திலே வாக்கு கேட்டு வந்திருக்கிறார். ஆகையால், அவருக்காக நானும் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய வைக்க வேண்டும். 

 

கலைஞர் கூறிய ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’ என்பதையே நானும் நினைவுபடுத்துகிறேன். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லாததையும் செய்வோம். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வாக்குறுதியை நிறைவேற்றி பலர் பயனடைந்து வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முக்கியத் திட்டங்களில் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஒன்று. மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அதனால்தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தி வருகிறோம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். 

 

நீட் தேர்வு விலக்கு சட்டம் இரண்டு முறை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை தமிழகத்தில் ஆளுநரோ, மத்திய அரசோ சிந்திக்கவுமில்லை; கவலைப்படவுமில்லை. ஆனால், என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கான விலக்கை பெற்றாக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்; கொள்கை. அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி எத்தனையோ திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உங்களிடத்திலே பொய்யான தகவலை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் திமுக சொன்ன எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

 

நாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் தயவு செய்து கண் மருத்துவரைப் பார்த்து கண்ணாடி வாங்கிப் போட்டு நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியலைப் படித்துப் பாருங்கள். இல்லையென்றால், நான் பேசுவதையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 85 சதவீதப் பணிகளைச் செய்து முடித்திருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றிக் காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் இல்லை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மிச்சம் இருக்கும் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை. நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதிமுக ஆட்சியில் நிதி நிலைமையை சரியாக வைத்துவிட்டுச் சென்றிருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே அதையும் நிறைவேற்றியிருப்போம். கொள்ளையடித்துவிட்டு அரசு கஜானாவை காலியாக வைத்துவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். அது அனைத்தையும் சரி செய்து கொண்டிருக்கிறோம். மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உரிமைத்தொகை வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்