Skip to main content

மக்களா நாங்களா என்பது தான் பிரச்சனை - சீமான் ஓபன் டாக்!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

A chance for an alliance? Seeman's clever answer!

 

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் நாதக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.

 

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

 

கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா எனச் சிலர் கேட்கிறார்கள். இது மிகப் பழைய கேள்வி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். அதற்கெல்லாம் நாங்கள் சலிக்கும் ஆட்கள் இல்லை. நாங்களா அல்லது மக்களா என்பது தான் பிரச்சனை. நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ச்சியாகத் தோற்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்குத் தெளிவு வந்து இவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்கள் என்றால் எங்களுக்கு வாக்களிப்பார்கள். வெல்லப்போகிறோம். 

 

பாஜகவை வரவிடாமல் தடுப்பதற்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும். அதை மாநிலக் கட்சிகள் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இப்பொழுது அந்த முயற்சியை எடுத்தால் தான் வீழ்த்த முடியும். அப்படி ஒரு அணி உருவாகி வரும் போது அதில் சேர்வதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். பாஜகவிற்குக் குறைவான இடங்கள் கிடைத்தால் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஆதரவு அளித்துவிட்டு வந்துவிடுவார்கள். அந்த அவப்பெயரை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். நாங்கள் உறுதியாக நின்று தனித்துத்தான் போட்டியிடுவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் அப்பொழுது யோசிப்போம்” எனக் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.