Published on 01/05/2019 | Edited on 01/05/2019
மத்திய அமைச்சர் உமா பாரதி நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ஏன் ராகுல் குடும்பத்தில் காந்தி என்ற துணை பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு விளக்கம் ஒன்றை தெரிவித்தார்.
![uma bharthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/J0JGp6ekPVTiaiB9dNgKjxORiIrW1EBNPTaKS2fZxKI/1556688327/sites/default/files/inline-images/uma-bharthi.jpg)
“காந்தி என்கிற வார்த்தை மஹாத்மா காந்தியிடம் இருந்து வந்ததல்ல பெரோஸ் காந்தியிடம் இருந்து வந்தது. பெரோஸ் காந்திக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் ஒத்துவரவில்லை. அவர்களுக்கு இந்த துணை பெயரை பயன்படுத்த உரிமை இல்லை. ஆனாலும், இந்த பெயரினால் மரியாதை கிடைக்கும் என்று பயன்படுத்துகிறார்கள். உண்மையில் மோடிதான் காந்தியின் பாதையை சரியாக பின்பற்றுபவர்” என்று பேசினார்.