Skip to main content

“தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
“Thank you Election Commission” - President Draupathi Murmu

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குதிரைப்படை வீரர்களின் பாரம்பரிய அணிவகுப்பு முறைப்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் செங்கோல் ஏந்தி வழி நடத்தி சென்றார். 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

இதனையடுத்து திரௌபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல். ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகால கால வாக்குப்பதிவுகளின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 தசாப்தங்களாக காஷ்மீரில் குறைந்த வாக்குப்பதிவைக் கண்டது. ஆனால் காஷ்மீர் இந்த முறை இந்தத் தேர்தல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது. 

“Thank you Election Commission” - President Draupathi Murmu

6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் 3வது முறையாக நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மூன்றாவது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்குத் தெரியும். இந்த மக்களவை அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்று. 18 வது மக்களவை பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும். நாட்டின் அரசியலமைப்பின்படி வரவிருக்கும் அமர்வுகளில் இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும். சமூக மற்றும் பல வரலாற்று சாதனைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. நாட்டில் பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் மோதல் போக்குகள் இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 வது இடத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. உலகின் சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடிந்தது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாகக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மணிப்பூர், மணிப்பூர் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

“நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு புதிய அத்தியாயம்” - குடியரசுத் தலைவர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
“Nalanda University is a new chapter” - President

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகையில், “பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ரூ. 3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியதை பார்த்திருப்பீர்கள். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை 4 மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து விதமான இணைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த  அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அங்கு வேகமாக பொருளாதாரம் முன்னேறி வருகிறது. 

“Nalanda University is a new chapter” - President

நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அவர்களுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 25 கோடி இந்தியர்களுக்கு அரசின் திட்டங்களில் இருந்து ஒருவர் கூட விடுபடக்கூடாது என்ற மன உறுதியுடன் ஒவ்வொரு அரசுத் திட்டத்தின் பலனையும் அவர்களுக்கு வழங்குவதே நோக்கம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் வறுமையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் இந்தியா, தபால் அலுவலகங்களின் நெட்வொர்க், தூய்மை இந்தியாதிட்டம் ஏழைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 

“Nalanda University is a new chapter” - President

திறமையான இந்தியாவிற்கு நமது ஆயுதப் படைகளில் நவீனத்துவம் அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. சீர்திருத்தங்களால், இந்தியா ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து ரூ.21 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை இன்று நாட்டிற்கு பயனளிக்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது ​​அவர்கள் அதனை எதிர்த்தனர். இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் ஒரு ஊடகத்தை உருவாக்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 

“Nalanda University is a new chapter” - President

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன் இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீண்டும் நிலைநாட்டி வருகிறது. சமீபத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்வி வளாகம் என்ற வடிவத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. நாளந்தா ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அடிப்படை அறிவு மையமாக இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சான்றாகும். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக மாற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.

முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததையும், மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர்  என்று முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.