Published on 09/05/2019 | Edited on 09/05/2019
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் குடியுரிமை வைத்திருப்பதாகவும், அந்நாட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் அவர், அந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களில் தன்னை இங்கிலாந்து குடிமகன் என குறிப்பிட்டுள்ளதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டினார்.
![supreme court rejects plea about rahul gandhi dual citizenship](http://image.nakkheeran.in/cdn/farfuture/Out1SxzogNY791cezLvk1mZulHsssR1ltzWuJoIH8Jw/1557386240/sites/default/files/inline-images/rahul%20std_9.jpg)
இந்த புகார் தொடர்பாக, ராகுலிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளதாக ராகுல் காந்தியே குறிப்பிட்டுள்ளதாகவும் இதனால், ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.