Skip to main content

கண்ணியத்தை இழந்து பேச வேண்டாம்!- ஆளுநர் கிரண்பேடி!

Published on 29/12/2019 | Edited on 29/12/2019

கண்ணியத்தை இழந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி மின்னஞ்சல் அனுப்பினார். அதில் என் மீதும், அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகை மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள்.
 

PUDUCHERRY GOVERNOR KIRAN BEDI EMAIL FOR CM NARAYANASAMY


கடந்த சில தினங்களாக எல்லை மீறி கண்ணியம் இழந்து பேசி வருகிறீர்கள். குற்றச்சாட்டை ஏற்காவிடில் அது குற்றம்சாட்டுபவரையே சாரும் என புத்தர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகை குறித்து நீங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு என்னதேவை என்பதை அறிந்து கொண்டு துணை நிலை ஆளுநர் அலுவலகம் செயல்படுகிறது என்று ஆளுநர் கிரண்பேடி மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்