Skip to main content

பிரதமரின் விமானத்தை சோதனையிட்ட அதிகாரி குமுறல்!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. முகமது மோசின் அவர்கள் ஒடிஷா மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக உள்ளார். கட்ந்த ஏப்ரல் 16 ஆம் தேதி , பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பயணம் செய்த விமானத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசின் சோதனை செய்தார்.  அவரின் இந்த செயலை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்ததில் எனது பணியைத்தான் செய்தேன். சட்டத்துக்கு உட்பட்டு எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.  

 

homsin



பிரதமரின் விமானம் எந்த இடத்தில் சோதனை செய்யப்பட்டது ?

ஏப்ரம் 16- ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் விமானத்தை ஒடிஷா மாநில தேர்தல் பார்வையாளர் திரு. முகமது மோசின் அவர்கள் சோதனை செய்தார். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி அந்த அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார் மோசின். அதனை விசாரித்த தீர்ப்பாயம் தேர்தல் ஆணைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் குறித்து மோசின் பேசுகையில் "பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை " தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்களுக்கு உட்பட்டு வீடியோ எடுக்க சொன்னேன். இது என் கடமை. என் பணி. இதைச் செய்ததற்கு என் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. தீர்ப்பாயத்தில் எனக்கு நியாயம் கிடைக்க போராடுவேன் என்று கூறினார். 

 

officers



இந்திய தேர்தல் ஆணையம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை ? என்பது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசின் பிரதமரின் சிறப்பு காவல் படை (எஸ்.பி.ஜி) வழிகாட்டுதல் படி மோசின் நடந்து கொள்ளவில்லை என தேர்தல் குற்றம் சாட்டியதாக மோசின் தெரிவித்துள்ளார். இப்படி தேர்தல் பார்வையாளராக இருக்கும் ஓர் அதிகாரி , சோதனை செய்வது விதிகளுக்கு புறம்பானது அல்ல என்று கூறப்படுகிறது. இதே கருத்தை வலியுறுத்தித்தான் ஐ.ஏ.எஸ் மோசின் அவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். 

மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறுகையில்  நடவடிக்கை எடுக்கும் முன்னர் எஸ்.பி.ஜி அதிகாரிகளிடம் கேட்டேன். பிறகு தான் சோதனை செய்தேன் என்று அதிகாரி மோசின் கூறுகிறார்.  கடந்த வியாழக்கிழமை ஐ.ஏ.எஸ் அதிகாரி மோசின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் , 'எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினருக்கு உரிமையளிக்க அதிகாரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே போல் கர்நாடகா முதல்வர் குமாரசாமி , ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் சென்ற தனி விமானத்தில் கூடத்தான் சில நாட்களுக்கு முன் சோதனை செய்யப்பட்டது என  விளக்கம் அளித்தது. மேலும் மோசின் கூறுகையில் "நான் 22 ஆண்டு காலம் அனுபவம் உள்ள அதிகாரி" .நான் எந்த கட்சியை சார்ந்தவனும் அல்ல. சட்டப்படி எதையும் எதிர்கொள்வேன் என்று முடிவாக கூறினார் மோசின்.


பி.சந்தோஷ், சேலம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.