Skip to main content

இந்தியாவில் இனி புயல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்... வல்லுநர்கள் கருத்து! 

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
The number of storms will increase in India ... Is this the reason?

 

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகி உள்ள நிலையில், இனி வரும் ஆண்டுகளில்  இந்தியாவில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெப்பத்தால் கடல் நீர் விரைவில் சூடாகி கடல் மேற்பரப்பில் பெரும்பாலான காற்று மேலெழும்பி விடுவதால் அந்த வளிமண்டல பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத்தை நிரப்ப  சுற்று வட்டத்தில் உள்ள காற்று சுழன்று விரைந்து வெற்றிடம் நோக்கி வரும் நிலையில், மேலே உறைந்த மேகமும் வெற்றிடம் தேடிவரும் காற்றோடு சேர்ந்து சுழல்கிறது. இப்படி தொடர்ந்து நடைபெறும் நீராவிப்போக்கு அந்தப் பகுதியில் பெரிய அளவில் குறைந்த காற்றுழத்த மண்டலத்தை உருவாகுகிறது. அப்படி உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் காற்றின் வலிமையை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அது புயலாக மாறுகிறது. இவ்வாறு  உருவாவதுதான் புயலாகும்.

 

2012 ஆம் ஆண்டு வங்கக்கடலில் 'நீலம்' என்ற ஒரேயொரு புயல்  மட்டுமே உருவானது. அதேபோல் 2013 -ல் மடி, வியரு உள்ளிட்ட நான்கு புயல்கள் இந்தியாவைத் தாக்கின. அதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அரபிக்கடலில் உருவான ஒரு புயல் மட்டுமே கேரளாவில் கரையை கடந்தது. 2015 ஆம் ஆண்டு ஒரு புயல் கூட இந்தியாவில் நேரடியாக கரையை கிடைக்கவில்லை. ஆனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி  சென்னையில் அதிக மழைப்பொழிவை கொடுத்தது. 2016-ல் ரோனோ, வர்தா என இரண்டு புயல்கள் தமிழகத்தில் கரையைக் கடந்தன.

 

The number of storms will increase in India ... Is this the reason?

 

2017ஆம் ஆண்டு எந்த புயல்களும் நேரடியாக தமிழகத்தில் கரையை கடக்கவில்லை என்றாலும் 'ஒக்கி' புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.  2018 ஆம் ஆண்டு டையூ, தித்லி அதேபோல் மறக்க முடியாத கஜா உள்ளிட்ட நான்கு புயல்களால் இந்தியாவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு ஐந்துக்கும் மேற்பட்ட புயல்கள் வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் உருவாகின. அதேபோல் 2020 ஆம் ஆண்டு சூப்பர் புயல், மிக அதி தீவிர புயலென 5 புயல்கள் உருவாகி அதில் 3 புயல்கள் இந்தியாவில் கரையை கடந்தன 

 

இப்படி கடந்த சில ஆண்டுகளாக புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாதலே காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் ஆண்டுகளிலும் இந்தியாவில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் புயல்கள் விரைவாக தீவிர புயலாக மாறுவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட 'டவ் தே' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது என்பது குறிப்பாக வல்லுநர்களால் நோக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.