Skip to main content

பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டீங்களா இல்லையா கேமரா மூலம் மோடி பார்ப்பார் - எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

இந்தியா முழுவதும் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது . இந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ பிரச்சாரம் செய்யும் போது பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது . குஜராத்தில் தாஹூத் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது  அம்மாநில பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, அப்போது  “யாரெல்லாம் பாஜகவுக்கு வாக்களிக்கிறீர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க இம்முறை பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். 

 

modi



நீங்கள் பிஜேபிக்கு ஓட்டு போட்டீங்களா இல்லையா என்று மோடி டெல்லியில் இருந்து கொண்டேப் பார்ப்பார் . பாஜகவின் ஓட்டு குறையும் வாக்குச்சாவடி பகுதிகளில் அரசின் எந்த  நலத்திட்ட உதவிகளும் வராது என்று பிரச்சாரம் செய்துள்ளார் . இவருடைய பிரச்சாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .

சார்ந்த செய்திகள்