Skip to main content

ஆறு மாதம் பெண்களின் துணிகளைத் துவைக்க இளைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி!!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

fg

 

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்குப் பெண்களின் துணிகளைத் துவைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் தனியார் இருப்பதைப் பார்த்துள்ளார். அவரிடம்  பேசுவதைப் போல் சென்ற அவர், சிறிது நேரத்தில் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். 

 

இளம்பெண்ணின் கூச்சல் சத்தம் தெருவில் எதிரொலிக்கவே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அந்த இளைஞரைத் தாக்கி இளம்பெண்ணை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமாதங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள பெண்களின் துணிகளைத் துவைக்க வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கினார். இந்த தீர்ப்பு அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் வடிந்த மழைநீர்- பயணிக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

Court ordered to pay Rs 50,000 compensation to the passenger who got rain water inside the bus!



அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணிக்க பணம் வசூலித்துவிட்டு, மழைநீர் வடிந்த பேருந்தில் பயணிக்க வைத்ததற்காக பாதிக்கப்பட்ட நபருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சோமசுந்தரம் என்ற வழக்கறிஞர் கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது மழை பெய்ததால், பேருந்துக்குள் தண்ணீர் வடிந்துள்ளது. மேலும், மாற்று பேருந்தின் இருக்கைகள் சரியில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

பயணியின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக 10,000 ரூபாய் மற்றும் பயணக் கட்டணம் 2,926 ரூபாயைச் சேர்த்து 62,926 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Next Story

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த பிரபல கடைக்கு ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிப்பு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

A fine of Rs 2.05 lakh has been imposed on a popular shop for selling underwear at Rs 18 extra!

 

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஓசூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடைகளை வாங்கியுள்ளார். ஆனால், அதன் விலைகளை சோதித்த போது, MRP விலையை விட 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது, இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில், ஊழியர்களின் தவறால் விலை மாற்றம் நடந்திருப்பதாகக் கூறி 18 ரூபாயை அனுப்பியுள்ளனர். 

 

இதனையேற்க மறுத்த சிவப்பிரகாசம், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிவபிரகாசத்திற்கு ரூபாய் 5,000 இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.