Skip to main content

"மூடநம்பிக்கையை எதிர்த்து போராட வேண்டும்"-பிரதமர் மோடி

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
மான் கி பாத்

 

 

 

 

பிரதமர் மோடி, ஒவ்வொரு ஞாயிறு அன்று 'மன் கி பாத்' (தமிழில் மனதின் குரல்)  என்னும் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பேசியபோது,

 

நாட்டின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள செய்தி மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். சில நேரங்களில் கனமழை பெரிய தொந்தரவுகளை கொடுப்பதாகக் கூறிய அவர்,இயற்கையுடன்  நாம் முரண்படுவதால் இது நடக்கிறது என்றார்.இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் மோடி தெரிவித்தார்.

 

 

 

கல்லூரி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும், அவர்களது ஆர்வம் எப்போதும் குறையக் கூடாது என்றும் மோடி கூறினார்.சமூக கொடுமைகளுக்கு எதிராக, துறவிகளின் போதனைகள் நம்மை ஊக்கப்படுத்தும் என்ற மோடி, மூட நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்