Published on 03/09/2021 | Edited on 03/09/2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 29,322 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கேரளாவில் 32,803 பேருக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நேற்று 18.41 ஆக இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம், இன்று 17.91% ஆக குறைந்துள்ளது.