Skip to main content

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 'கரோனா'  

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
photographer (11)

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கரோனா தொற்று இருப்பதாக ட்விட்டர் அவர் மூலம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்