Skip to main content

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை!

Published on 14/02/2020 | Edited on 15/02/2020

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு அம்மாநில எதிர்கட்சியினர் அச்சத்துடன் இருக்கும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதன்படி விரைவில் வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மார்ச் 5ம் தேதி ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்