Skip to main content

கட்டுப்பாடற்ற வேகத்தில் ஜாகுவார் கார் விபத்து;தர்ம அடி வாங்கிய மதுபோதை ஓட்டுநர்!!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

 

accident

 

 

 

மும்பையில் மதுபோதையில் அதிவேகத்தில் ஜாகுவார் காரை இயக்கி பத்துக்கும் மேற்பட்ட கார்களில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

 

 

மும்பை அந்தேரி பகுதியில் நேற்று மாலை ஜாகுவார் கார் ஒன்று கட்டுப்பாடற்ற வேகத்துடன் மக்கள் நடமாடும் கூட்டநெரிசல் பகுதிக்கு வந்தது. ரோட்டில் நின்றுகொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி நின்றது இந்த விபத்தில் சிறுவர்கள் பொதுமக்கள் என பலர் காயமடைந்தனர். 

 

 

 

முட்டிமோதி நின்ற காரை சிறைப்படுத்திய பொதுமக்கள் அந்த காரின் உரிமையாளர் ஹித்தேஷ் போலோஜாவை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்துக்கொடுத்தனர். அந்த ஜாகுவார் காரையும் சேதப்படுத்தினர். மேலும் ஹித்தேஷ் போலோஜா மதுபோதையில் வாகனத்தை இயக்கியது அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் இதுபோன்ற அலட்சிய போக்கால் நடைபெறும் வாகன விபத்துகள் அதிகரித்து வரும் நேரத்தில் மும்பையின் முக்கிய நகரங்களில் ஒன்றான அந்தேரியில் நடந்த இந்த சம்பவம்  பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சார்ந்த செய்திகள்