Skip to main content

'இது ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா?'-கேரளாவில் ஒரு மீசை நாயகி!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

 Is it only for men?-A mustachioed women in Kerala

 

முகத்தில் முடி வளர்ச்சி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையானது. இருப்பினும், அதிகப்படியாக  பெண்கள் அதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மீசை என்றாலே ஆணிற்கு சொந்தமான குறியீடு என்றே கருதப்படும் நிலையில் இந்த எல்லா விதிமுறைகளையும் உடைத்து, மீசை வளர்த்து அதில் பெருமிதமும் கொண்டுள்ளார் கேரள பெண் ஒருவர். அதுவும் மீசை இல்லாமால் வெளியே செல்வது எனக்கு அசவுகரியத்தைத் தரும் என தெரிவித்துள்ளதுதான் இதில் ஹை லைட்.  

 

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஷைஜா (35 வயது) என்ற பெண் மீசை வளர்ப்பதை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். உண்மையில், ஷைஜா அவரது புருவங்களைத் தொடர்ந்து திரித்துக் கொள்வார், ஆனால் அவரது மேல் உதட்டில் உள்ள முடியான மீசையை மட்டும் அகற்றுவது அவருக்கு பிடிக்காதாம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியாகிவிட்ட மீசை முடியை  ஷைஜா  அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.

 

"இப்போது மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது'' என தெரிவிக்கும் ஷைஜா, ''கோவிட் நோய் தொற்று தொடங்கிய போது, ​​மாஸ்க்கை எப்போதும் அணிவதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அது என் மீசையை மறைப்பது எனக்கு அசவுகரியத்தைத் தரும்'' எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் "என்னிடம் மீசை இருப்பதால் நான் அழகாக இல்லை என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மீசையை  விரும்புவதால் தான் வளர்க்கிறேன். எனக்கு விருப்பமானதைத்தான் செய்கிறேன்''எனவும் தெரிவித்துள்ளார்.

 

ஷைஜாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவரது மீசை வளர்க்கும் முடிவுக்கு ஆதரவாக உள்ளனர். அவருடைய மகளும் கூட அதை விரும்புகிறார். மக்கள் தன்னை கேலி செய்கிறார்கள் ஆனால் நான் கவலைப்படவில்லை என அசால்ட்டாக பதிலளிக்கிறார் இந்த மீசை நாயகி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.