Skip to main content

பத்தாண்டுகளில் 1,110 இந்திய பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை... அதிர்ச்சியளிக்கும் மத்திய அரசின் அறிக்கை...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

சுமார் 14 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியாற்றும் இந்திய முப்படையில், 2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1,110 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

indian defence ministry report on soldiers mental health

 

 

இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட முப்படைகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் பேர் இந்தியாவின் பாதுகாப்புக்காக இரவு பகலாக உழைத்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்காக தங்களை உயிரையும் பணயம் வைக்கும் இவர்கள், பல தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, "2010-2019-க்குள் 12 லட்சம் வீரர்களை கொண்டுள்ள ராணுவத்தில் 895 வீரர்களும், கப்பற்படையில் 32 வீரர்களும், விமானப்படையில் 185 வீரர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளுக்கான முக்கிய காரணமாக, குடும்பத்தின் பணப்பிரச்சனை, திருமண முரண்பாடு, உடல்நிலை ஆகியவற்றால் ஏற்படும் மன உளைச்சலே என கூறப்பட்டுள்ளது.

மேலும், வீரர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யோகா, மனநல ஆலோசனைகள் வழங்குதல், தரமான உணவுகள், குடும்பத்தினருடன் தங்கும் வசதி, சரியான விடுமுறை என இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.