Skip to main content

கல்லூரி மாணவியுடன் தனிமை; வியாபாரியை சுத்துப் போட்ட பெஸ்டீஸ்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

gang extorted money from a college student in Puducherry

 

புதுச்சேரி கூடப்பாகம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(50) என்பவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கருணாகரன் வழக்கம் போல் தனது மளிகைக் கடையிலிருந்த போது கல்லூரி மாணவி ஒருவர், தான் பக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பெற்றோர்கள் இல்லாததால் கணுவாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வருவதாகவும், தற்போது தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் எனவும் கருணாகரனிடம் கூறியுள்ளார். 

 

இதனையடுத்து கருணாகரனின் மேல் வீடு காலியாக இருந்த நிலையில், தனது வீடு காலியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டையே தனக்கு வாடகைக்குத் தரும்படி மாணவி கூற, கருணாகரனும் சரி என்று சொல்லியுள்ளார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படி கருணாகரன் கூற, இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தினமும் நீண்ட நேரம் ஃபோனில் பேசி வந்துள்ளனர். 

 

தொடர்ந்து ஃபோனில் பேசி வந்த இருவரும் அவ்வப்போது வெளியே சந்தித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில்தான் சம்பவத்தன்று இரவு கருணாகரனை அந்தப் பெண் தனிமையில் சந்திக்க வெளியே அழைத்துள்ளார். அதனையடுத்து கருணாகரனும் அந்தப் பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கருணாகரன் ஆடைகளைக் கழற்றியவுடன் அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து உடனடியாக ரூ. 2 லட்சம் பணம் வேண்டும் இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர். அதனால் கருணாகரன் கையில் எடுத்து வந்த ரூ. 50 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். மேலும் தனது நண்பருக்குக் கால் செய்து ரூ. 75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாகரனை மட்டும் அந்த கும்பல் விடுவித்த நிலையில், பதறிப் போன அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈட்டுப்பட்டது கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ்(21) மற்றும் ராமு(22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், ராமு மனைவியின் நண்பர்தான் அந்தக் கல்லூரி மாணவி என்பதும் அவரை வைத்துத்தான் இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கல்லூரி மாணவி மற்றும் அவரது கூட்டாளி அருண் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.