Skip to main content

அதிகாரிகளின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்.. முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Ex-CEO Arrested in Case of Cell Phone Polling of Stock Market Officials

 

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

 

2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு புகார்களை முன்வைத்தது. பங்குச்சந்தையின் ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்துவருகிறது.

 

இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்தது. பங்குச்சந்தை முறைகேட்டிற்காக இருவருக்கும் தலா ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைக்காததால் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மீதும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் ரவி நரேன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை புதிதாக வழக்குகளைப் பதிவு செய்தது. இது குறித்து சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்திய நிலையில், பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனிடமும் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட ரவி நரேன் 1994 முதல் 2013 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.

 

 

 

Next Story

எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு அதிகரிப்பு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

LIC Intrinsic Value Increase!

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ள நிலையில், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5% பங்குகளை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த மத்திய அரசு, அதன் மூலம் 21,000 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. கடந்த மே 17- ஆம் தேதி ரூபாய் 875- க்கு விற்பனையான எல்.ஐ.சி.யின் பங்குகள், ஜூலை மாதம் 15- ஆம் தேதி 708 ரூபாயாக, அதாவது 19% விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 4,50,434 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,39,686 கோடி ரூபாயாக இருந்து கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5,41,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்புடன் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பைக் கூட்டுவதன் மூலம் அதன் உள்ளார்ந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. எல்.ஐ.சி.யின் புதிய வணிகத்தின் மதிப்பு கடந்த 2020- 21ல் 4,167 கோடி ரூபாயாக இருந்து, 2021- 22ல் 7,619 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் விலை குறைந்தாலும், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்து வருவது, அதன் லாப விகிதம் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது.