Skip to main content

வட்டிக்கு வட்டி குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

CORONAVIRUS LOCKDOWN BANKS EMI PEOPLES SUPREME COURT

 

ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத தவணை (இ.எம்.ஐ) காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (10/09/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாதத் தவணையின் (இ.எம்.ஐ) வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் பற்றி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உயர்மட்டக்குழு ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் மாதத் தவணை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற உத்தரவு தொடரும். கடன் தள்ளுபடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும். வழக்கு விசாரணையை இனி ஒத்திவைக்கக் கோரக் கூடாது என நீதிபதிகள் மத்திய அரசை அறிவுறுத்தினர்.


 

 

சார்ந்த செய்திகள்