
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 19 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. இதனால் இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஒடிசாவில் பள்ளிகள் திறப்பட்ட நிலையில், தற்போது வரை ஆசிரியர் மாணவர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.