Skip to main content

“திருமணம் கொள்கை சார்ந்த விஷயம்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

central law minister kiren rijiju Institution of marriage a matter of policy

 

2018 ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி தன்பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள தன்பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

 

“தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்துப் போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. இந்திய குடும்ப அமைப்பில் ஆண், பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதே சிவில் சமூகம். தன்பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் 19ன் படி குடிமக்கள் சேர்ந்து வாழத் தடையில்லை. அதே நேரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசு தான் தெரிவிக்கும். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கூடாது” என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியதோடு, வழக்கின் விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலோ அல்லது செயல்பாடுகளிலோ மத்திய அரசு தலையிடாது. தனிநபர்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் குழப்பம் வேண்டாம். ஆனால், திருமண முறை என்பது வேறு, அது கொள்கை சார்ந்த விஷயம். இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டவை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அனைத்து பால் கேன்களுக்கும் ஜிஎஸ்டி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'GST for all milk cans' - Nirmala Sitharaman announcement

டெல்லியில்  53 வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

Next Story

விரைவில் அமலுக்கு வரும் 3 சட்டங்கள்; பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
3 laws coming into effect soon; Lawyers who neglected assignments

நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களான சிஆர்பிசி, ஐபிசி மற்றும் எவிடன்ஸ் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு வழக்கறிஞர்கள் மற்றும் பார் சங்கத்தினர் நீதிமன்றப் பணிகளை இன்று புறக்கணித்தனர்.

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.பி.துரைசாமி, செயலாளர் கே.சண்முகசுந்தரம் ஆகியோர் இன்றைய பணிப்புறக்கணிப்பு குறித்து கூறுகையில், 'தேசத்தில் சமஸ்கிருதத்தில் உள்ள சட்டங்களின் திருத்தங்கள் மற்றும் தலைப்புகளை மாற்றுவதற்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மசோதாக்கள் அல்லது சட்டங்கள் ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரிட்டது. தவிர, புதிதாக திருத்தப்பட்ட சட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளன. வழக்கறிஞர்கள் பல இடங்களில் குண்டர்களால் தாக்கப்பட்டதால், மத்திய அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வரக்கோரி நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது' என்றனர்.