Skip to main content

விமான பயணத்தில் உயிரிழந்த 4 மாத குழந்தை... 

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
indigo

 

கடந்த செவ்வாய்கிழமை அன்று விமானத்தில் பயணம் செய்யும் போது நான்குமாத குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹைதிராபாத் விமான நிலையத்தில் உயிரிழந்தது.  பெங்களூரில் இருந்து எடுக்கப்பட்ட விமானம் குறைந்த நேரத்திலேயே ஹைதிராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது. குழந்தைக்கு மருத்துவ உதவி செய்யவேண்டும் என்பதற்காக பெங்களூரில் இருந்து பாட்னா செல்லவேண்டிய விமானம், ஹைதிராபாத்துக்கு திருப்பப்பட்டது.

 

பெற்றோருடன் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பச்சிளம் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, விமான குழு ஹைதிராபாத்துக்கு திரும்புவதாக தீர்மானம் செய்தது. ஹைதிராபாத் விமான நிலையத்தில் மருத்துவரையும், ஆம்புலன்ஸையும் காலை 7:30 மணியளவில் இருக்குமாறு தகவல் சொல்லப்பட்டது. விமானம் விமான நிலையத்தில் இறங்கியவுடன், குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர், குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் செக்ஷன் 174 கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.               

    

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.