Skip to main content

பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது: மு.க.ஸ்டாலின்

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
stalin


பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது என திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

செய்தியாளர்: திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ஸ்டாலின்: தந்தை பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

செய்தியாளர்: ஒரு புதிய கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் உங்களை தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி அவர்களுக்கு திமுக தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது? புதிய கூட்டணி இப்போது தேவையா?

ஸ்டாலின்: நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அப்போது எங்களுடைய உயர்மட்ட குழுவுடன் விவாதித்து, பதில் சொல்வதாக தெரிவித்து இருக்கிறேன்.

செய்தியாளர்: மூன்றாவது அணி அமைப்பது இப்போது தேவையா?

ஸ்டாலின்: திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், உயர்மட்ட குழுவிடம் விவாதித்து பதிலளிப்போம்.

செய்தியாளர்: தமிழகத்தில் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நான் போக்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழ்நாட்டு மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

செய்தியாளர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என நீங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்த நிலையில், 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை மத்திய அரசு அழைத்திருக்கிறதே?

ஸ்டாலின்:  நேற்று மாலை தமிழத்தின் துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, “வரும் 8 ஆம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9 ஆம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தை கூட்டலாமா?”, என்று கேட்டார். அவருக்கு பதிலளித்தபோது, “உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட 6 வாரகாலத்தில் ஏற்கனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காக செய்யப்படும் நாடகம் இது”, என்று நான் தெளிவாக குறிப்பிட்டேன். ஆனால் அவர், “இல்லை. 9 ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதை பார்த்து விட்டு சட்டமன்றத்தை கூட்டலாம்”, என்று தெரிவித்தார். அதனால் நான் ஏற்றுக் கொண்டேன்.

செய்தியாளர்: நான்கு மாநில பிரச்னையான காவேரி விவகாரத்தில், பிரதமர் கர்நாடகத்தில் பேசும்போது மட்டும் டாப் பிரையாரிட்டி என்று சொல்கிறார், ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவே மறுக்கிறாரே?

ஸ்டாலின்:  அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று திமுக தரப்பில் நாங்கள் தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுள்ள பிரதமர் தமிழ்நாட்டு மக்களின் நிலை பற்றி கவலைப்படவில்லை. நேற்று நான் தொலைபேசியில் பேசும்போதுகூட, “நிச்சயமாக அவர் நம்முடன் பேசுவதற்கு அழைக்கப்போவதில்லை”, என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதனால் தான், முதலமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, “சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்ற, ராஜ்யசபையின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்கை தெரிவியுங்கள்”, என்று வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம், ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட  அனுமதிக்கவில்லை'' என்றார்.

Next Story

கள்ளச்சாராய மரணம்; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeiting liquor case ; CM consults with all District Collectors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனையில்  மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.