Skip to main content

மன நலப் பயிற்சியா? பணம் காய்க்கும் மரமா? போலீஸ் கவுன்சிலிங் மோசடி!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
police

 

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிபதி பாரதிதாசனிடம் ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், "ஒரு ம__ பு__ முடியாது'' எனச் சொன்ன போலீஸ்காரர்கள் ஆகியோர் நடந்து கொண்ட விதம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி எழுப்பியபோது, அந்தக் காவலர்கள் "மன அழுத்தத்தில் இருந்தார்கள்'' எனத் தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் "காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாயில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன'' எனத் தமிழக போலீசின் காவலர் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் பதில் அளித்தார்.

 

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர்களின் மன அழுத்தத்தை நீக்க பயிற்சி அளிக்கும் திட்டம் என்ன என நக்கீரன் ஆராய்ந்தது. இந்தத் திட்டம் 20.09.2018 அன்று முதல்வர் எடப்பாடியால் துவக்கி வைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பிரபல மனநல சிகிச்சை மருத்துவமனையான NIMANS நிறுவனத்தின் டைரக்டரான பேராசிரியர் பி.என். கங்காதர் என்பவரது ஆலோசனையோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் போலீசார் மற்றும் மூன்றரை லட்சம் பேர் அடங்கிய அவர்களது குடும்பம் ஆகியோரது மன அழுத்தத்தை நீக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

 

இதற்குத் தமிழகத்தில் ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்பவர் மதுரையின் புகழ்பெற்ற மனநல மருத்துவரான டாக்டர் சி.ராமசுப்பிரமணியன். அவரிடம் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டோம்.

 

"2018 ஆம் ஆண்டு நிறைய காவலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களது மனநிலை சரியில்லாததால் அவர்களது கடமைகளில் இருந்து தவறினார்கள். அதனால் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் காவல்துறையில் இருந்து 200 பேர் உளவியல் படிக்கவும், சமூகவியல் படிக்க 200 பேர் என 400 பேரை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு NIMANS மருத்துவமனையில் ஐந்து நாட்கள் பயிற்சி கொடுத்தோம்.

 

police

 

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் போலீசாருக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்தோம். அவர்களின் மனஅழுத்த அளவைக் கண்டுடித்து, மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்போம். இதுவரை 75 ஆயிரம் காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளித்துள்ளோம்.

 

சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை சிகிச்சைக்கான செலவாக அளித்துவிடும். இதுபோல நாங்கள் சிகிச்சை அளிப்பதை சாத்தான் குளம் சம்பவத்தில் விசாரிக்கும் நீதியரசர் பி.என்.பிரகாஷ் கேட்டார். அவர் முன் நான் ஆஜராகினேன்.

 

police

 

ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் வீடியோ மூலமாக ஆஜராகி இந்தத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். இந்தத் திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளித்தோமா என்பதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல முடியாது. நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள், மன அழுத்தத்தால்தான் அப்படி நடந்து கொண்டார்கள் எனத் தமிழக போலீசார் கூறியது பற்றி எனக்குத் தெரியாது. உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையில் காவலர் நலன் பிரிவைக் கவனிக்கும் உயர்போலீஸ் அதிகாரியான தாமரைக் கண்ணனிடம் கருத்துக் கேட்டார். அந்த முயற்சியில் தமிழக காவல்துறைக்கு உதவியாக இயங்கும் நாங்களும் கோர்ட்டுக்கு போனோம்'' என்றார்.

 

police

 

இந்த சி.ராமசுப்பிரமணியன் மதுரையில் ஒரு மனநல மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் தாமரைக் கண்ணனின் தூரத்து உறவினர். "நீங்கள் அளித்த சிகிச்சை பயன் அளிக்காமல் போனதால்தான் சாத்தான் குளத்தில் உள்ள போலீசார் கொலை செய்தார்களா?'' என ராமசுப்பிரமணியத்திடம் கேட்டோம். அதற்கு அவர், "நான் இந்தத் துறையில் புகழ் பெற்ற மருத்துவர். அதனால்தான் பெங்களூருவில் உள்ள NIMANS நிறுவனம் என்னை தேர்ந்தெடுத்தது. நானும் காவவர் நலன் பிரிவில் பதவி வகிக்கும் தாமரைக்கண்ணனும் உறவினர்கள் என்பது உண்மை. ஆனால் நாங்கள் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க அளிக்கும் சிகிச்சைக்கும் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இதுபற்றி நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள், "தாமரைக் கண்ணன் சென்னை மாநகர உளவுத்துறையில் பணியாற்றியபோது ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டார். இந்த ஒரே காரணத்திற்காக எடப்பாடி அவரை ஒதுக்கி வைத்தார். டி.ஜி.பி. திரிபாதிக்கு நெருக்கமான அவரைச் சட்டம் ஒழுங்கு பதவிகளுக்குக் கொண்டுவர திரிபாதி முயற்சித்தார்.

 

அதற்கு உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, தாமரைக் கண்ணன் சசிகலாவின் உறவினர் என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்தார். டி.ஜி.பி.யின் செல்லப் பிள்ளையான தாமரைக்கண்ணன், காவலர்களுக்கு மனஅழுத்தத்தை நீக்குகிறேன் எனத் தனது உறவினரான ராமசுப்பிரமணியனுடன் சேர்ந்து கொண்டு அரசுப் பணத்தைக் கல்லாகட்டுகிறார். இவர்கள் காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கவும் இல்லை, காவலர்கள் மனஅழுத்தத்திற்கும் சாத்தான்குளம் கொலை சம்பவத்திற்கும் நீதிபதி பாரதிதாசனின் அவமானப்படுத்தியதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை'' என்கிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

 

தமிழக காவல் துறை என்றாலே, எல்லாமே செட்டப்தானா?

 


 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.