Skip to main content

ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

சி.வி.சண்முகம் திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னணியில் ஓ.பி.எஸ். இருப்பதாக எடப்பாடி தரப்பு சொல்லி வருகிறது. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைமைக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியது பா.ஜ.க. அதனடிப் படையில் அ.தி.மு.க.வுக்கு அழைப்பு வந்தபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் தன்னைத்தான் கலந்துகொள்ள எடப்பாடி வலியுறுத்துவார் என எதிர்பார்த்த ஓ.பி.எஸ்., "கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாம் கலந்துகொள்ளும்போது அ.தி.மு.க.வின் தலைமை நாம்தான் என்கிற இமேஜ் உருவாகும். மோடியிடம் தனிப்பட்ட முறையில் சில விசயங்களை மனம்விட்டு பேச வாய்ப்பும் கிடைக்கும்' எனவும் நினைத்தார். ஆனால், ஆயுர்வேத சிகிச்சையில் ஓ.பி.எஸ். இருந்ததால் சி.வி.சண்முகத்தை அனுப்பினார். ஆனால், தனக்கு எதிராக எடப்பாடி செக் வைக்கிறார் என நினைத்து, "பா.ஜ.க.வுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டியவர்தான் சண்முகம். அவரை அனுமதிக்காதீர்கள்' என டெல்லியிடம் பேசி சண்முகத்தை திருப்பி அனுப்ப வைத்துவிட்டார் ஓ.பி.எஸ்.'' என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

 

admk



இதனையே சண்முகத்திடமும் சொல்லி வருகிறது எடப்பாடி தரப்பு. இதனால் ஓ.பி.எஸ். மீது சண்முகம் கோபத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் எதிரொலிக்கும் நிலையில், இது குறித்து ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சீனியர் ஒருவரிடம் நாம் பேசியபோது, சண்முகம் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் டபுள் கேம் விளையாடுகிறார் எடப்பாடி. இதனை சண்முகம் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி இப்போதெல்லாம் இருவரும் மோதிக்கொள்கிறார்கள். அதனால் இயல்பாகவே சண்முகத்திடம் ஆரோக்கியமான நட்பை வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.! அவர்களது நட்பு வலிமையடைந்தால் அது தனக்கு சிக்கல்தான் என யோசிக்கும் எடப்பாடி, அவர்களது நட்பில் விரிசலை ஏற்படுத்த நினைத்தார்.

 

admk



அதற்கேற்ப, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தது. இப்போதுதான் டெல்லிக்கு போய் மோடி உள்பட பலரையும் சந்தித்தார் எடப்பாடி. மீண்டும் அவரே டெல்லிக்கு செல்வது ஓ.பி.எஸ்.சுக்கான முக்கியத்துவத்தை குறைப்பதாக விமர்சனம் வரும். நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி கலந்துகொண்டதையே கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உங்கள் நிதியமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே? அவரை அனுப்பி வைக்கமாட்டீர்களா?' எனக் கேட்டிருக்கிறார். அந்த வகையில், மீண்டும் அவரே வருவதை பா.ஜ.க. தலைமை விரும்பாது. அதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பி.எஸ்.சைத்தான் டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழல். ஓ.பி.எஸ். தான் வர வேண்டும் என டெல்லியும் விரும்பியது.

 

admk



இதனை விரும்பாத எடப்பாடி, சண்முகத்தை தேர்ந்தெடுத்தார். அவரை அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் எடப்பாடிக்கு தெரியும். ஒருவேளை அனுமதித்துவிட்டால் "ஓ.பி.எஸ்.சை அனுப்பி வைக்க டெல்லி கேட்டது. அவரை விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்' என சொல்லி சண்முகத்திடமிருக்கும் தனக்கு எதிரான எதிர்ப்புணர்வை குறைக்கலாம் எனவும் திட்டமிட்டு, டபுள் கேம் ஆட நினைத்தார் எடப்பாடி. சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக சண்முகத்திடம் கொளுத்திப் போடுகிறது எடப்பாடி தரப்பு. இந்த விவகாரத்தில் ஓ.பி. எஸ்.சுக்கு சம்பந்தமே இல்லை'' என்கிறார் உறுதியாக.

 

admk



இதற்கிடையே, ஜி.எஸ்.டி.யில் மாற்றங்கள் தேவையா என்பதை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநில நிதியமைச்சர்களிடம் விவாதிக்க நினைத்தார் நிர்மலா சீதாராமன். இந்த கூட்டத்திலும் ஓ.பி.எஸ்.சை கலந்துகொள்ள விடாமல் செய்து அவருக்கு பதிலாக அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பிவைக்க திட்டமிட்டார் எடப்பாடி. ஆனால், டெல்லியில் நிர்மலா சீதாராமன் காட்டிய கோபம் நினைவில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சை எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. டெல்லிக்கு பறந்தார் ஓ.பி.எஸ்.


இது ஒருபுறமிருக்க, அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால், தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு எப்படி இருக்கும்? என உளவுத்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிப்போர்ட் கேட்டதன் அடிப்படையில் விரிவான ரிப்போர்ட் தரப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அந்த ரிப்போர்ட்டில், "ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும். அ.தி.மு.க. கூட்டணியை உதறிவிட்டு தனித்துப் போட்டியிட்டால் எதிர்க்கட்சி வரிசைக்கு பா.ஜ.க. முன்னேறும். ரஜினி வருகிறபட்சத்தில் தேர்தல் களத்தை கணிக்க முடியாது' என குறிப்பிட்டிருக்கிறதாம் மத்திய உளவுத்துறை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய விவாதம், அது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனைக் குழு என ஒரு பக்கம் பா.ஜ.க. தீவிரமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் 6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வியூகங்களை டெல்லி மேற்கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள் பிரச்சனைக்காக அ.தி.மு.க. அரசை எந்தளவுக்கு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு அனுமதி தந்துள்ளார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா!
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.