Skip to main content

மருத்துவர் சைமனுக்கு நேர்ந்தது மிகக் கொடுமையானது... யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது - திருமா பேச்சு!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு என்பது சமூகப்பரவல் என்ற அளவிற்குச் செல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியுள்ளதாவது, "இன்றைக்கு ஒடிசா முதல்வர் முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒருவேளை நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார்.
 

 

 

f



மேலும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் செய்துள்ளார். இந்த கோரிக்கைகளை நேற்று முகநூல் நேரலையில் நாங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைத்தோம். தற்போது அதனை ஒடிசா முதல்வர் நிறைவேற்றி உள்ளார். நமது கோரிக்கைகள் ஒடிசா முதல்வருக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்தியாவிலேயே ஆகச்சிறந்த முதல்வர் என்ற பாத்திரத்திற்கு உரித்தானவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். ஐந்தாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்பவர். அவர் மீது இதுவரை யாரும் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வைத்ததில்லை. அவதூறு பரப்புவதற்காகக் கூட அவர் மீது இதுவரை யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது இல்லை. இவ்வாறு ஆட்சி செய்யும் அவர், மருத்துவர்களின் தியாகங்களைப் புரிந்துகொண்டு அவர்களைத் தியாகிகள் என்றே அழைப்போம் என்று முடிவெடுத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 

தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கைகளை நாம் வைத்தோம். ஏனென்றால் தமிழக மருத்துவருக்குச் சில தினங்களுக்கு முன்பு  நடந்த அவமரியாதையை நாம் அறிவோம். மருத்துவர் சைமன் அவர்களுக்கு நேர்ந்தது மிகக் கொடுமையானது. மனிதாபிமானம் உள்ளவர்கள் யாரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டு இடங்களில் அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து கடைசியாக அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்துள்ளார்கள். அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யப்போனவர்களின் உடலைத் தாக்கி இருக்கிறார்கள். வண்டியைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவ ஊழியர்களைக் காயப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த மருத்துவரின் மீது எந்தக் கோபமும் இல்லை.
 

http://onelink.to/nknapp


சாதி மதம் என்ற அரசியலும் அதில் இல்லை. கரோனா தொற்றுக்கு ஆளானவரை இங்கே புதைத்தால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் பயந்ததன் விளைவாக இந்த நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. அவர்களுக்கு இருக்கின்ற அச்சம் நியாயமானதுதான். ஆனால் அது அறியாமையின் வெளிப்பாடு. அவர்களின் அறியாமைக்கு யார் பொறுப்பு. நாம் எல்லோருமே பொறுப்பு. அரசு மட்டுமே இதற்குப் பொறுப்பு ஆகாது. கரோனா வைரஸ் கொடியது என்ற அளவிற்கு மட்டும் தான் அது மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று கொண்டால் குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் இது பரவும் என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கின்றது. இதற்கு முன்பும் பலபேர் இத்தகைய கொள்ளை நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை ஒப்பிடுகையில் அப்போது இதைவிட அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்த எச்சரிக்கையை அனைவரிடமும் முறையாகக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.

 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.