Skip to main content

அமைச்சர் நடத்திய ஆன்மிக விழா... கரோனாவை மறந்த பக்தகோடிகள்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!

 

‘வாழும் ராஜராஜனே!’ என்று சிலிர்க்கிறார்கள், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பாசத்தைப் பொழியும் ஆன்மிக அன்பர்கள். 

‘வரலாற்று நாயகன் ராஜராஜ சோழனோடு ராஜேந்திரபாலாஜியை ஒப்பிடுவது சரியா?’ என்று கேட்டால், “மன்னர் காலத்திற்கு பிறகு தனிநபராக சிவன் கோவில் கட்டிய பெருமைக்குரியவர் இவரே!  ராஜராஜ சோழன், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் என்பதால், தஞ்சையில் மகா சிவன் கோவிலாக, பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி எழுப்ப முடிந்தது. மன்னரோடு மந்திரியை ஒப்பிட முடியாதுதான்! ஆனாலும், தன்னால் முடிந்த அளவுக்கு பெருமுயற்சி எடுத்து, இங்கே விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அதே சிவனான தவசிலிங்க சுவாமிக்கு, கோவில் எழுப்பி மஹா கும்பாபிஷேகமும் நடத்தியிருக்கிறார். தஞ்சையில் இருப்பது பெரிய கோவில் என்றால். மூளிப்பட்டியில் இருப்பது சிறிய கோவில். அங்கும்.. இங்கும்.. எங்கும் நிறைந்திருப்பது ஈசனே!” என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

 

admk minister rajendrabalaji


‘ராஜராஜன் ஒப்பீடு மிகையல்லவா?’ என்று சிந்திக்கும்போதே, முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூட, தனது முகநூல் பக்கத்தில்- வெண்கொற்றக்குடை பிடித்தபடி அன்பர்கள் பின்தொடர, பட்டுத் தலைப்பாகை அணிந்து, கையில் வாளோடு,  ராஜேந்திரபாலாஜி நடந்துவரும் படத்துக்கு மேலே, ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க, ராஜ மார்த்தாண்ட… பராக்! பராக்!’ என வாசகங்களைப் பதிவிட்டுள்ளது, கேலியாகவோ, கிண்டலாகவோ கருதப்படுகிறது.  

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!


தங்கம் தென்னரசுவின் பதிவு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “போற போக்குல கேலி பண்ணிடலாம். அது ரொம்ப ஈஸி.  வீட்ட கட்டிப் பாருன்னு பெரிசா சொல்லுவாங்க. சிவன் கோயில கட்டி முடிச்சு, அதுவும் இந்த கரோனா நேரத்துல கும்பாபிஷேகம் நடத்துறது சாதாரண விஷயம் இல்ல. கோயிலைக் கட்டி முடிக்கிறதுக்குள்ள ராஜேந்திரபாலாஜி பட்ட பாடு இருக்கே..” என்று பெருமூச்சு விட்டவர், “ஆமாங்க.. கடந்த ஒன்றரை வருஷமா அமைச்சருக்கு அப்படி ஒரு சோதனை. மாவட்டச் செயலாளர் பதவில இருந்து தூக்கிட்டாங்க. மந்திரி பதவியும் போயிரும்னு பேச்சு வந்துச்சு. கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ணும்போது பதவியோ பொறுப்போ இல்லாம போச்சுன்னா? இத நினைச்சு ரொம்பவே கவலைப்பட்டாரு.

 

‘எந்த மந்திரியாச்சும் கோவில் கட்டுறாங்களா?  இதெல்லாம் எதுக்கு’ன்னு கேட்டா, ‘பிறக்கிறப்ப நான் எதையும் கொண்டுவரல. எல்லாமே சாமி கொடுத்ததுதான். சாமி கொடுத்தத சாமிக்கே செலவழிச்சிட்டு போறேன். அதுல உங்களுக்கு என்ன நஷ்டம்’னு திருப்பிக் கேட்பாரு. மூளிப்பட்டிய சுற்றியிருக்கிறவங்க ஒத்துழைப்போடு கட்டிய கோயிலுன்னு சொன்னாலும்.. ராப்பகலா இந்த கோவிலையே நினைச்சு, மனசுக்குள்ள திட்டம் தீட்டி, பார்த்துப் பார்த்துக் கட்டினாரு. தன்னோட குலதெய்வம் தவசிலிங்கத்து மேல அவர் வச்சிருக்கிற நம்பிக்கை வீண் போகல. விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரா தலைமை அறிவிச்சது.” என்றார்.

 

Spiritual ceremony conducted by the Minister! -Corona Forgotten Devotees!


500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால்,  கரோனாவை அறவே மறந்து, பக்தர்கள் பெருமளவில் கூடிவிட்டனர். அந்த ஏரியாவில், பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, பூக்கடை எல்லாம் முளைத்து, திருவிழாக்கோலம் பூண்டது மூளிப்பட்டி. அதுவும் யாகசாலை பூஜை நடந்த முந்தைய நாள் இரவு, வாண வேடிக்கையெல்லாம் நடத்தி கொண்டாடி தீர்த்தனர்.

 

http://onelink.to/nknapp

 

கையில் மகளைத் தூக்கிக்கொண்டு, மாஸ்க் போடாமல் கும்பாபிஷேகம் காண வந்த பாண்டியராஜனிடமும், மூதாட்டி சுந்தரம்மாளிடமும் ‘கரோனா பயம் இல்லையா?’ என்று கேட்டோம். “சாமி கும்பிடத்தானே வந்திருக்கோம்? எந்த கரோனாவும் எதுவும் பண்ணாது. இங்கே வந்திருக்கிற எல்லாரு முகத்துலயும் அன்பையும் பாசத்தையும் பார்க்கிறோம். அது போதும். ஓம் நமசிவாயா!” என்றார்கள், பக்தி பரவசத்துடன். 

 

திருமூலரும் சொல்கிறார் - அன்பே சிவம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.