Skip to main content

வரலாறு உள்ளவன் எழுதுகிறான் இல்லாதவன் திருடுகிறான் - சீமான் பொளேர்!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவரின் பதில்கள் பின்வருமாறு,

மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முயற்சி செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது திட்டமிட்டு எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை. 18 நாட்களுக்கும் மேலாக பாஜக ஆட்சி அமைவதற்கு காத்திருந்த ஆளுநர், எதிர்கட்சிகளை சேர்ந்த யாருக்கும் முறையான கால அவகாசம் வழங்கவில்லை. அது அரசியல் அமைப்பு ரீதியாக தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். ஆளுநர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அனைத்துக்கட்சிகளையும் சமமாக பார்க்க வேண்டும். இது மராட்டியத்தில் தவறாக முறையில் செயல்படுகிறது என்பது மட்டும் நூறு சதவீத உண்மை.

 

d



உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் கட்சி அதற்காக தயாராக உள்ளதா?

நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். அவர்கள் முறையாக தேர்தலை நடத்தினால் நாங்கள் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறுவோம். அதற்கான வேலைகளில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். 

பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளதை பற்றி?

நம்மை போன்ற பிள்ளை திருக்குறளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடே அவரின் பேச்சு. பால் பாக்கெட்டுகளில் இதை எழுவதுதால் என்ன பயன் இருக்க போகிறது. பாலை ஊற்றிக்கொண்டு கவரை தூக்கி எறிந்துவிடுவார்கள். பாடத்திட்டத்தில் வையுங்கள். இப்போது திருக்குறளுக்கு காவிச்சாயம் அடிக்க பார்க்கிறா்கள். 2000 வருஷத்துக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு உண்டா, சாதி மதம் இருந்ததா? அப்படி இருக்கையில் வள்ளுவனுக்கு சாதி சாயம் பூசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. வரலாறு உள்ளவன் எழுதுகிறான், இல்லாதவன் திருடுகிறான்.

அமெரிக்காவில் ஓபிஎஸ்க்கு தினம் ஒரு விருது கொடுக்கிறார்கள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கொடுக்கட்டுமே, நம்ம ஆளுக்குதானே கொடுக்கிறார்கள். இப்ப என்ன விருதெல்லாம் தகுதியின் அடிப்படையிலா கொடுக்கிறார்கள்? நம்ம ஆளுங்க வாங்கராங்க, நாமே பாராட்டவில்லை என்றால் எப்படி. டாக்டர் பட்டம் எல்லாம் இப்ப எப்படி கொடுக்கிறார்கள்? நம்ம தமிழ்நாட்டுகாரர்களை நாமே பாராட்டவில்லை என்றால் அடுத்தவர்களா பாராட்டுவார்கள். அமெரிக்காவில் கூட நம்ம பையன்கள்தான் விருது கொடுக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் கொடுக்கவில்லை, அவ்வளவு தான்.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா அல்லது கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்திப்பீர்களா?

நான் யாரோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடியும்? உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். நான் யாரோடும் இணைந்து தேர்தலை சந்திக்க முடியாது. நான் தனியாகத்தான் தேர்தலை எதிர்கொள்வேன். தனி மரம் தோப்பாகாதே? என்று கேட்கிறீர்கள். நான் தனிமரம் அல்ல. என்னை நம்பி 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். எனக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். அப்புறம் எப்படி என்னை தனிமரம் என்று கூறுவீர்கள். நான் என்னை வலிமையுள்ளவனாக என்னை நினைக்கிறேன். என்னை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால் தேர்தலை சந்திப்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. 


 

 

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.