Skip to main content

சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

ருமான வரித்துறை சரியாகத்தான் குறி வைக்கிறது. அதன் ரெய்டுக்குப் பிறகான நடவடிக்கைகள் மத்திய மோடி அரசின் விருப்பு-வெறுப்புகளை பொறுத்தே அமைகின்றன.

சசிகலா குடும்பத்தினர், ப.சி. குடும்பத்தினர், கிறிஸ்டி புட் நிறுவனம் என ரெய்டுகளை நடத்திய வருமானவரித்துறையினர் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோசடிகள் சிலவற்றையும் கண்டறிந்தனர். அதில் ஒன்று, சென்னைக்கருகே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நெம்மேலியில் 86 ஏக்கர் நிலம் கிறிஸ்டி நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கிறது.
 

pc-sasi-eps


தமிழகம் முழுவதுமுள்ள சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் நாமக்கல் நிறுவனமான 'கிறிஸ்டி'யின் கோக்குமாக்குகள் பலவற்றை நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

1991-96 ஜெ. ஆட்சியில் மதுசூதனன் அமைச்சராக இருந்தபோது, சத்துணவுத் திட்டத்திற்கு சத்துமாவு சப்ளை செய்ய கிறிஸ்டி புட் நிறுவனம் முயற்சிக்கிறது. அப்போது பூந்தமல்லியில் இயங்கி வந்த கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க சத்துணவு மையங்களுக்கு சத்துணவு சப்ளை செய்ய ஆர்டரை மதுசூதனனின் உறவினர் ஜெ.பி. மூலம் பெறுகிறார். (இதை அப்போதே நக்கீரன் பதிவு செய்திருக்கிறது). பின்னர் ஜெ. ஆட்சியில், சமூகநலத்துறை அமைச்சராக வளர்மதி இருந்தபோதும் கிறிஸ்டியின் முட்டை சப்ளை தமிழகம் முழுவதும் தொடர்ந்தது. எடப்பாடி ஆட்சி அமைந்ததும் பழைய உறவுகளின் மூலம் கிறிஸ்டி நிறுவனம் தொடர்ந்து முட்டை சப்ளை செய்து வருகிறது. அழுகிய முட்டைகளை சப்ளை செய்து, கமிஷன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களை சரிக்கட்டியதையும் நக்கீரன் அம்பலப்படுத்தியது.

 

 


ஐ.ஏ.எஸ். அதிகாரியான சதீஷ்குமார் திருச்சியில் பணிபுரிகிறார். இவரது மனைவியும் ஹிமாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவி அயல் பணி நியமனமாக தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மேலாளராக நியமிக்கப்படுகிறார். உணவு அமைச்சர் காமராஜ், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோர் தமிழகம் முழுவதும் சத்துணவு முட்டை விநியோகத்தை மேற்கொள்கின்றனர்.

 

egg-corruption



இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை பெருக்க நினைத்த கிறிஸ்டி நிறுவனத்தை கர்நாடக அரசு தரமற்ற சத்துமாவு சப்ளை செய்ததாக தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி கர்நாடகாவிலும் தமிழ்நாடு போல புகுந்து விளையாட ப.சி. குடும்பத்தை அணுகுகிறது கிறிஸ்டி நிறுவனம். கர்நாடகாவில் வேறு பெயரில் இயங்கி சித்தராமையா அரசில் கால் பதிக்கிறது. கிறிஸ்டியின் கர்நாடக ஆபரேஷன்களுக்கு ப.சி.யின் பணம் முதலீடாகிறது என வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிக்கிறது.

 

 


இந்த அறிக்கையைப் படித்த பிரதமர் மோடி "கிறிஸ்டியின் நடவடிக்கைகளில் சசிகலா குடும்பத்திற்கு சம்பந்தமில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். சசிகலா குடும்பத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி மூலமாகவே கிறிஸ்டிக்கும் தொடர்பு இருந்தது என ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிறது வருமானவரித்துறை. இப்படி ப.சி., சசிகலா என அரசியலின் இரண்டு எதிரிகளுடன் தொடர்பு கொண்டிருந்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆணையிடுகிறார் மோடி. நெம்மேலியில் உள்ள இடம் ப.சி., ஜெ.பி., கிறிஸ்டி நிறுவனம் என கை மாறியிருப்பதை அறிந்து, ஜெ.பி.க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்க, அவரது வழக்கறிஞரான நளினி சிதம்பரம் லைனில் வந்துள்ளார். ஜெ.பி.யிடம் செல்போன் பாஸ்வேர்ட் என்ன என அதிகாரிகள் கேட்டபோது, "வக்கீலிடமே கேளுங்கள்' என்றாராம். அதேபோல் ப.சி.யிடம் ஏன் நிலம் வாங்கினீர்கள் என கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடம் கேட்ட கேள்விக்கான எழுத்துப்பூர்வமான பதிலை நளினி சிதம்பரத்தின் ஆலோசனைப்படி சுதாதேவி ஐ.ஏ.எஸ். தனது கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து தந்தார் என்கிறார்கள் அதிர்ச்சி விலகாத வருமானவரித்துறையினர்.

minister-kamaraj-saroja
ஜெ.பி.யின் அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது, ஆவணங்கள் சிக்காமல் ஆரம்பத்தில் தவித்த வருமானவரித்துறையினர், பின்னர் அலுவலக ஊழியர்களின் உள்ளாடைகளை சோதனையிட்ட போது அதில் ஸ்பெஷல் பாக்கெட் தைக்கப்பட்டு, அதற்குள் பென் டிரைவ்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் மேலும் பல ஆவணங்கள், டாலர்களை கைப்பற்றிய வருமானவரித்துறையினர், ஜெ.பி. அங்கே வந்தபோது, "நீங்கள் போகலாம், எங்களுக்கு உங்களது கணினியிலிருந்து ஆவணங்கள் கிடைத்துவிட்டன. 36 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அமலாக்கத்துறை உங்களை விசாரிக்கும்'' என்றவர்கள், "அவரது அலுவலகத்தில் இருந்த கேமராக்களில் மு.க.ஸ்டாலினின் மருமகன் வந்து சென்ற பதிவுகளை பற்றி சில கேள்விகள் கேட்டோம்'' என்கின்றனர்.

ரெய்டின்போது சுதாதேவி ஐ.ஏ.எஸ். படுஉஷாராக இருந்துள்ளார் என்கிற அதிகாரிகள், "அவரது அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் வளர்மதி என்கிற சகோதரி மூலமாகவே செய்திருந்தார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நகைகளை மட்டுமே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் ப.சி.யின் நிலத்தை ஏன் வாங்கினேன் என கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி வருமானவரித்துறைக்கு அளித்த பதில் டைப் செய்யப்பட்டிருந்தது. மற்ற விவரங்கள் அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு அழித்திருந்தார். அவரது செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் மனு உருவாக்க சாஃப்ட்வேரை போட்டு மீட்டெடுத்து, அவரை மடக்கினோம்'' என்கிறார்கள்.

 

 


"கிறிஸ்டி புட் நிறுவனத்தில் 4 நாட்கள் ரெய்டு நடத்தினோம். அவர்களது கம்ப்யூட்டர்களை நெருங்க முடியவில்லை. அதன் பென் டிரைவ்களை ஒளித்து வைத்திருந்தார் அதன் மேலாளர் கார்த்திகேயன். அவரை லத்தி துணையுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தபோது, அவர் அலுவலகத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். வருமானவரித்துறையின் கடுமையை கண்ட மற்ற ஊழியர்கள் அலறிப்போய் நிறுவனத்தின் கழிவறைகளிலும் ஜன்னலின் உட்புறமும் கயிறு கட்டி ஒளித்து வைத்த சாவிகளை காட்டினர்.

அதில் ஒரு சாவி கிறிஸ்டி புட்ஸ் அலுவலகத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வீட்டுக்கு உரியது. அந்த வீட்டின் கிணற்றில் ஆவணங்கள் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. ஜன்னலில் கட்டப்பட்ட கயிறில் பென் டிரைவ்கள் சிக்கின. தற்கொலைக்கு முயன்ற கார்த்திகேயன் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் 8 கிலோ தங்கம் கிடைத்தது. மற்ற இடங்களில் 17 கோடி ரூபாய் பணம் மட்டுமே கிடைத்தது'' என்கின்றனர்.

 

 


"ரெய்டில் கிடைத்த ஆவணங்களில் மிக முக்கியமானது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாயை கிறிஸ்டி புட் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றிய ஆவணம். அதேபோல் கிறிஸ்டி புட் நிறுவனத்தில் ப.சி. முதலீடு செய்த ஆவணங்கள், அதனுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி மூலமாக தமிழக சத்துணவு திட்டத்தில் முட்டை வினியோகத்தில் கோடி கோடியாக கமிஷன் பார்த்த ஆவணங்கள், இவற்றுடன் ஜெ.பி., ப.சி. மூலமாக கர்நாடகத்தில் கிறிஸ்டி செய்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள் எனப் பட்டியலிடுகிறார்கள் அதிகாரிகள்.

jpரெய்டு பற்றி அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் கருத்து கேட்டபோது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், ப.சிதம்பரத்தின் மனைவியான வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்டோம். "உங்களது வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது நீங்கள் அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் நிலத்தை விற்றதாகவும் அதை கிறிஸ்டி நிறுவனம் வாங்கியதாகவும் வருமான வரித்துறை சொல்கிறதே?'' என கேட்டதற்கு, "அது தவறான தகவல்'' என்றார். "நீங்கள் ஜெ.பி.க்கு சொந்தமான அக்னி நிறுவனத்திற்காக வழக்கறிஞராக பணிபுரிகிறீர்களா?'' என கேட்டதற்கு "அதுவும் தவறான தகவல். நான் இது குறித்தெல்லாம் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசுவதில்லை'' என்றார். ரெய்டில் தொடர்புடையவர்களின் விளக்கங்களை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வருமானவரித்துறை ரெடியாகியுள்ளது. இந்த டீமுடன் தொடர்புடைய முன்னாள் உள்துறை செயலாளர் சையது முனீர் ஹோதா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடமும் விசாரணை பற்றியும் அத்துடன் வெளிநாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றியும் விசாரிக்கப்படும் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

 

 

 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.