Skip to main content

"முத்துசாமி தொடங்கி அமித்ஷா வரை... துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி...” - கண்ணன்ஜி பேச்சு

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

ேி்

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தேவைப்பட்டால் சந்திப்போம். வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக கண்ணன்ஜி அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " அண்ணன் சிலுவம் பாளையம் பழனிசாமி தற்போது தான் சரியான திசையை நோக்கிப் பயணிக்கிறார். எப்படி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பார்களோ அதைப்போல வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

தனக்கு வாய்ப்பளித்த ஈரோடு முத்துசாமி துவங்கி, இந்த முதல்வர் பதவி அளித்த சின்னம்மா, தினகரன்,  இந்த 4 வருடம் ஆட்சியைக் காப்பாற்றிய  பன்னீர் செல்வம் என அனைவருக்கும் அவர் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டினார். இதில் கடைசியாக தற்போது பாஜகவிடம் வந்துள்ளார். பாஜகவிடமும் தன்னுடைய பதவி வெறிக்காக தன்னுடைய அரசியல் வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். கூட்டணிக் கட்சி என்பதைத் தாண்டி இன்றைக்கு அவர் வேற கட்சி நான் வேற கட்சி என்று அமித்ஷாவைப் பேசுகின்ற அளவுக்கு இன்றைக்கு அவரின் பதவி வெறி கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியைவிட தன்னுடைய பதவி அதிகாரம் என்பதிலேயே குறியாக இருப்பார்.

 

இவரின் அதிகார வெறி இன்றைக்குத் தன்னைக் காத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தவர்களைக் கூட எதிர்க்கும் மனநிலைக்கு வந்துள்ளார். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் செயல்பட்டு வருவது என்பது எவ்வளவு பெரிய அவமானம். தன்னைவிடக் கட்சி சிறியது, தொண்டர்கள் கீழானவர்கள் என்ற மன நிலையையே அவரை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது. எடப்பாடியை எந்த ஒரு அதிமுக தொண்டரும் எப்போதும் மன்னிக்கப் போவதில்லை. வரலாற்றில் அழியாத கறையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

 

இந்த நிலைமையில் அவர் மெகா கூட்டணி அமைப்பேன் என்று மார்தட்டுகிறார். அவர் மஹா கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம், மெகா கூட்டணி ஒருபோதும் அமைக்க முடியாது. வெறும் வாயால் வடை சுடலாமே தவிர வேறு ஒன்றையும் அவரால் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தோல்விப் பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதை அவர் உணர்ந்துவிட்டார். அவர் ஒன்றும் மக்களைச் சந்தித்து முதல்வராகி விடவில்லை. குறுக்கு வழியில் வந்ததால் அதே வழியில் மீண்டும் பதவிக்கு வந்து விடலாமே என்று ஆர்வக்கோளாறுத் தனமாக இருக்கிறார். அவரால் ஒருபோதும் வர முடியாது. அவருக்கு மக்கள் தோல்வியையே பரிசாகக் கொடுப்பார்கள்.

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.