Skip to main content

துணை இழந்த பறவையானார் கி.ரா

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

 


கரிசல் மணம் கமழும் எழுத்தால் இலக்கிய உலகில் புகழ்பெற்றவர் கி.ராஜநாராயணன் ஆவார்.  கி.ரா. என அழைக்கப்படும் அவருடைய 97 ஆவது பிறந்தநாளை அவருடைய இலக்கிய நண்பர்கள் அண்மையில்தான் அவரோடு சேர்ந்து கொண்டாடினார். இந்த நிலையில் அவரது உற்ற துணையாக இருந்து வந்த 87 வயதுடைய அவர் மனைவி கணவதி அம்மையார்  25-ந் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

k

 

இதனால் முதுமையில் துணை இழந்த பறவையாகிவிட்டார் கி.ரா.  வழக்கமாக கி.ரா.வைப் பார்க்க அவர் வீடுதேடி யார் வந்தாலும், அவர்களை அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்பாளராகத் திகழ்ந்தவர் கணவதி அம்மையார். அதனால்  அவரது மறைவுச் செய்தியை அறிந்த இலக்கிய அன்பர்கள் பெரும் துயரடைந்தனர். மிகவும் முதிர்வயதில் இருக்கும் கி.ரா.வுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவர்கள் கவலையடைந்தனர்.ஆனால் தன்னைத் தேற்றிக்கொண்ட கி.ரா. துக்கம் கேட்க வந்தவர்களிடம் இயல்பாகப் பேசி, நலம் விசாரித்துக்கொண்டிருந்தார் என்கிறார்கள். நேற்று( 26-ந் தேதி ) கணவதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் கருவடிக்குப்பம் மயானத்தில் நடந்தன.

 

இதுகுறித்து பிரபல கவிஞரும் இலக்கியவாதியுமான புதுவை தமிழ்நெஞ்சன், தன் முகநூலில் பதிவு செய்திருக்கும் உருக்கமான செய்தியை இங்கே பார்க்கலாம்.  

k


நெகிழ்ச்சி தரும் நிகழ்வு!

-புதுவை தமிழ்நெஞ்சன்


கி.இரா இல்லத்தரசி இயற்கை எய்திய நிகழ்விற்கு மகள் தமிழ்மொழியோடு சுடுகாடுவரை சென்றுவந்தேன்.

வீட்டிற்குள் சென்ற போது கண்ணாடி பேழையில் நீள் துயிலில் கணவதி அம்மா அடுத்த அறையில் கி.இரா பேசிக்கொண்டு இருக்கிறார்.எப்போதும் போல... வந்தவர்களுடன்

"என்ன செய்யறீங்க" என்கிறார் கி.இரா இளவேனிலிடம். "அம்மாவ குளிப்பாட்டனும் அதற்காக மூன்று பேர் தண்ணீ எடுத்து வரனும்" என்கிறார் இளவேனில்.

"எரிக்கத்தானே போராங்க அதற்கு எதற்கு குளிப்பாட்டனும்" என்கிறார்.

இளவேனில் அமைதியாக இருக்கிறார்.

"சரி எதையாவது செய்யுங்க" என்று சொல்லிவிட்டு எல்லோரையும் பார்க்கிறார்

எங்கெங்கும் அமைதி. வெளியே வருகிறேன் "தமிழ்நெஞ்சன்"என்றழைக்கிறார் செயபிரகாசம் ஐயா "என் இறப்பு உயில் எழுதுவதற்கு சொன்னேனே நினைவிருக்கிறதா"
என்றார்.

"ஆமாம் ஐயா சட்டத்தில் நீங்கள் சொல்வது போல இல்லையின்னு வழக்கறிஞர் சொல்லிட்டார்"என்கிறேன்.

இங்கே நடந்து கொண்டிருப்பதை கவனித்தவர், "இப்போது அவரின்( கி.இரா) விருப்பத்திற்கு மாறாக நடக்கும் சடங்கைப்போல எனக்கும் நடந்திடக் கூடாதே என்பதற்காக முன்கூட்டியே எழுதி ஆவணப்படுத்தி விடவேண்டும் என நினைக்கிறேன்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் செயபிரகாசம் ஐயா கொள்கையில் உறுதியும் நேர்மையும் உள்ளவரின் மனவுணர்வு எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அவரை புரிந்து கொண்டேன்.

இயக்குநர் தங்கர் பச்சான் வருகிறார். அங்கே பேராசிரியர்கள் பஞ்சாங்கம், வெங்கட சுப்பராய நாயக்கர், நாகலிங்கம்,உரு.அசோகன், ஆசிரியை ஏமாவதி, பு.விசாகன்,   செந்தமிழினியன் கோ.செல்வம், சீனு.தமிழ்மணி,கு.அ.தமிழ்மொழி ஆகியோருடன் இறுதி ஊர்வலம் கருவடிக்குப்பம் சுடுகாடு நோக்கி புறப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.